தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தன் காதல் கணவரான தனுஷை பிரிந்தார் ரஜினி மகள் ஐஸ்வர்யா.
மீண்டும் தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இதனையடுத்து சில நாட்களில் ‘முசாபிர்’ எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.
அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் ‘பயணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.
விரைவில் ஒரு புதிய படம் இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘பயணி’ வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.
நாயகியின் பெற்றோர் அவர் கண் முன்பே சண்டை போடுகிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி ஜோடியாக செல்ஃபி எடுத்து மகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
எனவே விரைவில் பிரிந்த தம்பதியர் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.
இந்த பயணி குறித்து ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
9 வருட இடைவெளிக்குப் பிறகு என் மகள் ஐஸ்வர்யா இயக்கிய பயணி இசை ஆல்பத்தை வெளியிட்டதில் மகிழ்ச்சி;
நீ எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன், கடவுள் ஆசீர்வதிப்பார், லவ் யூ”
– ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ளார்.
தனுஷ் தன் ட்விட்டரில்..
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani
https://t.co/G8HHRKPzfr
God bless
@rajinikanth | @ash_r_dhanush | @soundaryaarajni | #Payani
Rajinikanth launches Aishwrya’s music single