பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாருக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் தூக்குவாளியில் உணவு வழங்கும் ரஜினி ஃபேமிலி

பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாருக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் தூக்குவாளியில் உணவு வழங்கும் ரஜினி ஃபேமிலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police security at Rajinikanth houseதமிழகமே எதிர்பார்த்த தன் அரசியல் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

கட்சி கொடி சின்னம் தொடர்பான விவரங்களை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த போலீசாருக்கு ரஜினி இல்லத்திலிருந்து (பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல்) தூக்குவாளி மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மதியம் உணவை தொடர்ந்து மாலை நேரங்களில் டீ & காபி வழங்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் வீட்டு உணவு கிடைத்த உற்சாகத்தில் போலீசாரும் உற்சாகமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rajinikanth family provides lunch and evening snacks to police security guards

400 ஏழை மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கிய அர்ஷிதா & குனிஷாவுக்கு பாராட்டு..; புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதியில்லை.. – கமல்ஹாசன்

400 ஏழை மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கிய அர்ஷிதா & குனிஷாவுக்கு பாராட்டு..; புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதியில்லை.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக (மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை) மூடப்பட்டுள்ளன.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

கல்லூரிகளில் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் இவை இரண்டையும் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளதாவது…

இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்பிற்கு திறன்பேசி வாங்க வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக, “ஹெல்ப் சென்னை” அமைப்பைத் தொடங்கி பயன்படுத்தப்பட்ட திறன்பேசிகளை தானமாகப் பெற்று 400 மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய அர்ஷிதா அகர்வால், குனிஷா அகர்வால் இருவரையும் பாராட்டுகிறேன்.

Kamal praises helpline social activists, Arshitha Aggarwal and Kunisha Aggarwal

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா தற்கொலை; வருங்கால கணவருடன் பிரச்சினை?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா தற்கொலை; வருங்கால கணவருடன் பிரச்சினை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandian Stores fame VJ Actress Chitra suicideவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் சித்ரா. 1992ம் ஆண்டு மே 2ஆம் தேதி பிறந்தவர்.

இவர் நடிகையாவதற்கு முனபு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தார்.

2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர்.

நடனம், மாடலிங் என பல திறமைகளை கொண்டவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடிகை நிரோஷாவுடன் நடித்தும் வந்தார்.

சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. வருங்கால கணவரின் பெயர் ஹேமந்த் ரவி.

இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்துகொண்டார் சித்ரா. நேற்று நள்ளிரவில் சூட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா புகைப்பட ஆல்பம்

அப்போது ரூமில் வருங்கால கணவரும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது- அதிகாலை பாத்ரூம் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமந்த் ஓட்டல் நிர்வாகிகளிடம் கூற அவர்கள் கதவை திறந்துள்ளனர்.

அப்போது சித்ரா தூக்கில் தொங்கியதை கண்டுள்ளனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது-

தற்கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தன் சீரியல் துறையில் பிரச்சினையா? வருங்கால கணவருடன் பிரச்னையா, உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவின் திடீர் மறைவுக்கு நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pandian Stores fame VJ Actress Chitra suicide

சிவகார்த்திகேயனை அடுத்து கமல்ஹாசனுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.?

சிவகார்த்திகேயனை அடுத்து கமல்ஹாசனுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fahadh faasil kamal haasanமலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத் பாசில். இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவுடன் நடித்தார்.

மேலும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்தார்.

தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கவுள்ள படம் ‘விக்ரம்’.

கமலின் 232வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்பட டைட்டில் டீசர் கமலின் பிறந்த நாளில் வெளியானது.

இப்படத்தின் மற்ற நட்சத்திரங்கள் யார் நடிக்கிறார்கள் என்கிற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

Fahadh Faasil to play antagonist in Kamal Haasan’s next film

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழப்பு.. 73 ஆண்டுகள் தீராத பிரச்சனை…; கமல் கண்டனம்

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழப்பு.. 73 ஆண்டுகள் தீராத பிரச்சனை…; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் அருகே, அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் வேறு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் அரசு பெண் ஊழியர் சரண்யா. (வயது 24)

அப்போது தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வேளாண்மை துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இவரின் அலுவலகத்தில் (வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில்) கழிப்பிட வசதி இல்லாத நிலையில் அவதிப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மரணம் குறித்து மநீம தலைவர் கமல் கூறியுள்ளதாவது…

“இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை.

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.

என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan on TN govt employee dies slipping into septic tank

காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா.. தனுசு ராசி டூ மகர ராசி..; ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதி.!

காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா.. தனுசு ராசி டூ மகர ராசி..; ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirunallar kovil sani peyarchiகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயம்.

இந்த ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் விழா நடைபெறவுள்ளது.

வரும் டிசம்பர் 27-ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இதனால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்னும் 2 வாரத்தில் (டிசம்பர் 27ஆம்) தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி சனிப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் நடைபெற்றது.

எனவே பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

அந்த படிவத்துடன் அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Pre-registered people only allowed inside the Thirunallar temple during Sani peyarchi

More Articles
Follows