தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரிபுராவில் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற வகையில் பாஜக எச்.ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அன்று இரவே பெரியார் சிலை ஒரு சில இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மேலும் பல எதிர்ப்புகள் எச்.ராஜா மீது கிளம்ப, அந்த பதிவை நான் செய்யவில்லை. என் அட்மின்தான் செய்தார் என பல்டி அடித்தார்.
இதை நடைபெற்று 2 நாட்கள் மௌனம் காத்த ரஜினிகாந்த், இன்று அது குறித்து கூறியுள்ளார்.
”பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்தார்.
தற்போது இந்த விவகாரம் அமைதியாகிவிட்ட நிலையில் இது பற்றி பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.