தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வழங்கவிருந்தார்.
ஆனால் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கைக்கு ரஜினி செல்லக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பின.
திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோருக்கு ரஜினி செல்லக்கூடாது என்றனர்.
ஆனால் சுப்ரமணிய சுவாமி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரஜினி சென்றால் தப்பில்லை என்றனர்.
இந்நிலையில் நான் ஒரு நடிகன்.. அரசியல்வாதி அல்ல. என் இலங்கை பயணத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.
தமிழர்களுக்காக பலர் மடிந்த வீரமண்ணை, அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க நினைத்தேன்.
மேலும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து தினம் வருந்துகிறேன். எனவே என்னளவில் முடிந்தவரை திரு மைத்திரி பாலா சிரிசேனா அவர்களுடன் அங்கே பேச நினைத்தேன்.
ஆனால் பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இம்முறை ரத்து செய்கிறேன்.
ஆனால் இனிவரும் காலங்களில் என்னை இலங்கைக்குப் போகவிடாமல் செய்துவிடாதீர்கள். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Rajinikanth cancelled Srilanka tour
அந்த அறிக்கையின் முழு விவரம் இதோ..