தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் இன்று 5வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.
அப்போது ஒரு சின்ன கதையை கூறி தன் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார்.
பழைய காலங்களில் அரசர்கள் இருப்பார்கள். படைபலம் இருக்கும். ஆனால் ஆட்கள் குறைவாக இருப்பார்கள்.
ஆனா, போர் என்று வரும்போது எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவாங்க.
மத்த நேரம் உழைச்சுட்டே இருப்பாங்க. வீர விளையாட்டுகள் எல்லாம வச்சது, அவங்க உடலை பலப்படுத்தணும்னுதான்.
அவங்க கடமையை செஞ்சுட்டே இருப்பாங்க. போர்னு வரும்போது மண்ணுக்காக, மானத்துக்காக போராடுவாங்க. அது போல எனக்கும் கடமை, இருக்கு. தொழில் இருக்கு.
அதுபோல் ரசிகர்கள், நீங்க ஊருக்கு போங்க, கடமையை செய்யுங்க. எனக்கும் வேலை இருக்கு. நான் என் வேலையை பார்க்குறேன்.
ஆனால் போர்னு வரும்போது நாம கண்டிப்பா பார்த்துப்போம். ஆண்டவன் எப்போதும் நம்முடன் இருப்பான். நன்றி.” என கூறினார் ரஜினிகாந்த்.
Rajinikanth again confirmed his political entry by telling King Story