100 முறை ரத்ததானம் செய்த மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

100 முறை ரத்ததானம் செய்த மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)நம்மில் பலர் ரத்ததானம் செய்யவே பயப்படுகிறார்கள். ரத்ததானம் பற்றி நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒரு சில இளைஞர்களே இதை செய்து வருகின்றனர்.

ஆனால் பிரகாஷ் என்ற மாற்றுத் திறனாளி 100 தடவைக்கு மேல் ரத்ததானம் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

ஒரு மாற்றுத்திறனாளி இந்த அளவிற்கு ரத்ததானம் செய்ததில்லை என கூறப்படுகிறது.

அவரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து பிரகாஷ் கூறியதாவது:

நான் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே உண்டு.

இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து ரத்ததானம் மற்றும் உடல்தான விழிப்புணர்வும் செய்துள்ளேன்.

எனவே எனக்கு சாதனை சான்றிதழ் வழங்கி உள்ளனர். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த சாதனை சான்றிதழை ரஜினி அவர்கள் கையால் வாங்க விரும்பினேன்.

இதை மன்றம் மூலம் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் என்னை அழைத்து பாராட்டினார். அவர் கையால் அந்த சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்டேன்.” என்றார்.

ரம்ஜான் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப்போன ‘கொலைகாரன்’

ரம்ஜான் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப்போன ‘கொலைகாரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவரும் இணைந்துள்ள படம் கொலைகாரன் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஆஷ்மிகா நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை தியா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனஞ்செயன் அவர்கள் படத்தை வெளியிடுகிறார்.

நாளை ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 5-ந்தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஜூன் 7-ந்தேதி (வழக்கம்போல வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

காலா 2 படம் குறித்து டைரக்டர் ரஞ்சித் ஓபன் டாக்

காலா 2 படம் குறித்து டைரக்டர் ரஞ்சித் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

அதன்பின்னர் அவர் தமிழ் படங்கள் இயக்காமல் படங்களை தயாரித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற தமிழ் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது…

காலா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி கேட்டனர்.

காலா 2 படம் இயக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் அதுபோன்ற படங்கள் இனி அதிகம் வரும்” என்றார்.

​பெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்

​பெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)இலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். இலங்கையில் சிறந்த நடிகர் மற்றும் பாப்புலர் ஆக்டர் என இரண்டு நேஷனல் அவார்டைத் தட்டிச் சென்றுள்ளார்.

குழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இந்தப் படத்தின் கதைக் கருவும் வீர்சிங்கே தந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நுழைந்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் வீர்சிங்.

மும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஸ்ரீலங்காவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறேன்.. அங்கே கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் அந்த நிமிடம் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன்..

இந்தப் படத்தின் கதைக்கருவை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு உருவாக்கி வந்தேன். எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் இதைச் சொன்னதும் இதைப் படமாக்க முடிவு செய்தோம். நான் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவன்.

அதனால் ஒவ்வொரு பெண்ணையும் தாயாக மதிக்க வேண்டும் என நினைப்பவன்.. அவர்கள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல.. அவர்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது என் மனதிலேயே ஊறிவிட்டது.

இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்கா மற்றும் தமிழ்நாடு என இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளது.. முன் ஜென்மத்தில் எனக்கு இந்தியாவுடன் ஏதோ தொடர்பு இருந்து இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

அதனால்தான் என்னையும் அறியாமல் இந்தியாவை நேசிப்பதுடன் தென்னிந்திய மொழிப் படங்களில் குறிப்பாக தமிழில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன்.

தமிழில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்வதை மட்டுமே விரும்புகிறேன். நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன் என்கிறார் வீர்சிங்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் பற்றி பேசுகிறபோது, “முஸ்லீம்கள் எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல.. இங்கே முஸ்லீம்கள், தமிழர்கள் என எல்லோரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறினால் இந்த நட்பு பாதிப்புக்கு உள்ளாகிறது ஒரே உலகம் ஒரே மக்கள்.. எல்லோருக்கும் இந்த உலகில் உயிர் வாழ உரிமை இருக்கும்போது, அவர்களைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்கிறார் வருத்தம் கலந்த வலியுடன்!

அந்த நிமிடம் படம் வெளியான பின் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இடம் கிடைக்கும் என்கிறார் வீர் சிங்….

ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன்

ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை ‘அசரீரி’ என்ற அதே தலைப்பில் உருவான குறும்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மறுபுறம், இது தொழில்நுட்ப அம்சங்களை பற்றியது மட்டுமல்ல, கதையில் உள்ள உணர்ச்சி கூறுகளை பற்றியதும் கூட. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது நிச்சயம்” என்றார்.

இயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.

நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

இயக்குனர் ஜி.கே. ஏற்கனவே “ராடான் குறும்பட போட்டியில்” அதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். “நாங்கள் இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு” என்றார்.

அறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு ”இசை” என்பது மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும். அதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரபாலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

இளையராஜாவே போதும் நிறுத்திக்குங்க.. – முருகன் மந்திரம்

இளையராஜாவே போதும் நிறுத்திக்குங்க.. – முருகன் மந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஒரு துறையில் அதீத அசாத்தியமான திறமையாளராக இருப்பது போற்றுதலுக்கும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் அற்புதமான திறமையாளர் என்பதற்காக அவர் செய்யும் மனிதாபிமானம் இல்லாத பகுத்தறிவு இல்லாத செயல்களை மீண்டும் மீண்டும் ஆதரிப்பது பைத்தியக்காரத்தனம்.

அவருக்கு இசை தவிர வேறோன்றும் தெரியாது என்பதெல்லாம் அறிவற்ற உளறல். விஞ்ஞானிகள் ஆய்வுக் கூடங்களில் சரியாக உறங்காமல் பல் விளக்காமல் குளிக்காமல் உடை மாற்றாமல் ஒன்றும் இரண்டும் கூட சரியாக போகாமல் ஆய்வில் மூழ்கி இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

சில திரைப்பட எழுத்து/விவாத வேலைகளுக்காக வெளியூரில் தங்கி இருந்த போது நானே கூட அப்படி இருந்திருக்கிறேன். நேரத்திற்கு எதையும் செய்யாமல்.

இளையராஜா என்ன அப்படி முடிவெட்டாமல் குளிக்காமலா இருக்கிறார்?

ஒரு நிகழ்வில் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் 10000 ரூபாய் டிக்கெட் இருக்கைகளில் அமர்ந்ததும் செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வந்து தண்ணீர் கொடுத்ததும் விழா ஏற்பாட்டில் உள்ள குறைபாடு.

ஏற்பாடு செய்த நிறுவனம் அதன் ஊழியர்கள் தவறு அது.

அவர்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தான் அது தவறு எனில் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஞானிகளே மனம் பிறழும்போது சராசரி மக்கள் மனம் பிறழ மாட்டார்கள், நியாயமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது அனுபவ அறிவு போதாமை அல்லது அதீத நம்பிக்கை.

தண்ணீர் குடிக்கும் டம்ளர்களையே கட்டிப்போடுபவர்கள் மனிதர்கள். கோயில்களில் சிசிடிவி கேமரா வைப்பவர்கள் மனிதர்கள். அவ்வளவு தான் மனிதர்களின் சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, மனிதர்களின் கடவுள் மீதான நம்பிக்கை எல்லாம்.

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுக்கு யார் யாரையோ இளையராஜா குற்றம் சுமத்துவதை பார்க்கும்போது, செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசும் போது, செக்யூரிட்டி பரிதாபமாக இளையராஜா முன் நிற்கும் போது,
செக்யூரிட்டி அவர் காலில் விழுவதை பார்க்கும் போது, அதைத் தடுக்க விரும்பாமல் இளையராஜா நிற்கும் போது…

போதும் என்று தோன்றுகிறது மதிப்பிற்கும் மகிழ்வுக்கும் உரிய இளையராஜா அவர்களே…
அந்த செக்யூரிட்டி தனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட தமிழில் தான் பேசி இருப்பார். அது சபை நாகரிகம் மட்டும் அல்ல உங்கள் மீதான மரியாதையும் கூட.

எனக்குத் தெரியாத எந்த பிரபலம் கூடவும் புகைப்படம் எடுக்க விரும்பாத நான் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே ஒருமுறை வந்தேன்.

என்னுடன் வந்தவர்கள் வரிசையில் வந்து உங்கள் காலில் விழுந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் அப்பா அம்மா வீட்டு பெரியவர்கள் காலில் விழுந்து கும்பிடுவதாக நினைத்து கும்பிட்டிருக்கக் கூடும். எனக்கு அந்த பழக்கம் இல்லை.

ஆனால் அனைவரும் காலைத் தொட்டு கும்பிடுகிறார்கள். சிலநொடி குழம்பினேன். ஆனாலும் காலில் விழவில்லை நான். கைகளில் முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

ஒருவர் தன் காலில் விழுந்து வணங்குதை விரும்புவதும் அதைத் தடுக்காமல் இருப்பதும் மனிதாபிமானம் அற்ற சமத்துவம் இல்லாத செயலாகவே நான் கருதுகிறேன்.

பாடகர் ஏசுதாசுக்கு பாடகர் எஸ்.பி.பி. ஒருமுறை பாதபூஜை செய்தார். அதுவும் அனைத்து மீடியாவையும் அழைத்து. அன்று முதல் இருவரது புகைப்படத்தையோ அல்லது அவர்களை நேரிலோ பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. அதிலும் யேசுதாசைப் பார்த்தால் சற்று கூடுதலாக.

அவ்வளவு மரியாதை பாசம் என்றால் தனியாக வீட்டில் செய்யலாமே. ஊருக்கு தெரிய செய்வது அசிங்கமானது மட்டும் அல்ல வரவேற்கத் தக்கதும் அல்ல. இதே அருவருக்கத்தக்க செயலை எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் அனைத்து ஆசிரியர்களையும் உட்கார வைத்து மாணவர்களை பாதம் கழுவச் சொல்லி அதை புகைப்படங்கள் வீடியோ எடுத்து மீடியாக்களில் பகிர்ந்து பெருமை பீற்றினார்கள்.

அசிங்கம். கேவலம். சமத்துவத்திற்கு எதிரான மனித உரிமை மீறல் அது.

ஆக இளையராஜா அவர்களே… உங்கள் கூட இருப்பவர்கள் உங்களை ஓவராக துதி பாடினால் அவர்களை ஈவு இரக்கம் இன்றி வெளியேற்றுங்கள்.

உலகமே உங்களை கொண்டாடுவதை பலகோடி முறை நீங்கள் உங்கள் காதுகளால் கேட்டிருப்பீர்கள். அதை எவரும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

என் பாடல்களால் தான் உங்கள் வாழ்க்கை, நான் இப்படி இருப்பது தெரிந்தும் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்… என்று நீங்களே பேசுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனம். அது உங்களை சிறுமைப் படுத்தவே செய்யும். இசைஞானி என்கிற மனிதனின் இசைக்கு சிறுமை இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இளையராஜா என்கிற மனிதருக்கு சிறுமையே.

உங்களுக்கு இசையை தவிர வேறேதும் தெரியாது என்கிற பழைய பல்லவியை உங்கள் ஆதரவாளர்கள் திரும்ப திரும்ப பாடுவது அபத்தம்.

அப்படியா என்ன?

உங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? இதில் நீங்கள் ஆன்மீகவாதி என்று சொல்வது இன்னும் பொருத்தமற்றதாக இருக்கிறது.

ஆன்மீகம் செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுமா என்ன? அந்த தொனி அதிகார உளவியலின் வெளிப்பாடு.

பகுத்தறிவு பெறுங்கள் இசைஞானியே. உங்கள் நண்பர் கமலையே சமூக ஞானி என்கிறார்கள். நீங்களாவது உண்மையான சமூக ஞானியாக மாறுங்கள்.

நீங்கள் எங்களுக்கு தந்திருக்கும் இசை தமிழனின் கடைசி தலைமுறை வரை போதும். ஆமாம். தமிழனின் கடைசி தலைமுறை வரை உங்கள் இசையும் உங்கள் புகழும் உயிர்த்திருக்கும். ஏன் தமிழனும் தமிழ்நாடும் இல்லாமல் போனால் கூட உங்கள் இசை இருக்கும்.

ஆக எங்களுக்கு இதுவரை நாங்கள் பார்த்த இசைஞானி இளையராஜா போதும். நாங்கள் பார்க்க விரும்புவது இளையராஜா என்கிற சாதாரண இயல்பான மனிதரை.

உங்கள் நடவடிக்கைகள் விஷயத்தில் சாதியை இழுப்பவர்கள் அற்பமானவர்கள். அது முட்டாள்தனம். அதைத் புறந்தள்ளுவோம்.

ஆன்மீகம், கடவுள் பக்தி எல்லாம் வேண்டாம் என நான் கூற விரும்பவில்லை. ஆனால் பாவலரின் சகோதரன் நீங்கள். உங்கள் இசையின் தொடக்கமும் நீங்கள் அறிந்ததே.

உலக உழைக்கும் வர்க்கம் குறித்தும் இந்தியாவின் சாதியம் குறித்தும்
மதங்களின் கலாச்சாரங்களின் பெண்ணடிமை குறித்தும் தெளிவான புரிதல் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த இளையராஜா இப்படி நடந்து கொள்ளவே மாட்டார். அவர் இசைஞானியாக தன்னை உணர மாட்டார். எளிய மனிதராகவே உணர்வார்.

அதை நீங்கள் மார்க்ஸிடம் இருந்து பெரியாரிடம் இருந்து அம்பேத்கரிடம் இருந்து சேகுவேராவிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம். இவர்கள் யாரும் உயிரோடு இல்லை எனினும் அவர்களது சிந்தனைகள் உயிரோடு இருக்கிறது. அவ்வளவு ஏன்? திருமாவளவனிடம் இருந்து கூட நீங்கள் தெரிந்து/கற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் இசைஞானி என்பதற்காக சக மனிதனுக்கான மரியாதையை மறுக்காதீர்கள். மனிதாபிமானம் மறக்காதீர்கள்.

சாதியும் மதமும் செய்வதையே நீங்களும் செய்வது அறம் அற்ற செயல். அது மனிதமற்றதும் கூட.

தவிரவும் இது உங்களின் இசையோடு வாழ்வதாக நீங்களே நம்புகிற தமிழ் இனத்தை சர்வாதிகார அரசியல் சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நேரமிது. உங்கள் தமிழ் இனத்தை காப்பாற்ற அந்த இனத்தில் ஒருவராக சக மனிதராக அன்பும் மனிதாபிமானமும் கொண்டு சமத்துவத்தை நேசிக்கிற பண்ணைப் புரத்து சின்னத்தாயின் மகனாக புத்துயிர் கொள்க எங்கள் இசைப்பெருமகனே… எங்கள் இசைப் பேரரசே!.

என்றும் உங்கள் இசைமீது
தீராக் காதலுடன் வாழ்ந்து மறையப் போகும் ஒருவனாக…

– முருகன் மந்திரம்

More Articles
Follows