தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டருகே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதன் பின்னர் இன்று தன் வீட்டருகே செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது… ’நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன்.
நான் பாஜகவில் சேரப்போவதாக சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.
அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது’’ என பேசினார்.
Rajini talks about his politics entry and next movies