தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா இன்று ஏப்ரல் 28 விஜயவாடாவில் கொண்டாடப்படுகிறது.
இதில் பங்கேற்க விஜயவாடா சென்ற ரஜினிகாந்தை விமான நிலையத்தில் என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா வரவேற்றார்.
பொன்னாடை அணிவித்து வரவேற்ற பாலகிருஷ்ணாவை ரஜினிகாந்த் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் சந்தித்தார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த NTR 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
(இந்த விழா அழைப்பிதழில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.)
என் டி ஆரின் திருவுருவுச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் ரஜினிகாந்த்.
இந்த விழா மேடையில் ரஜினியை பேச தொகுப்பாளர் ரஜினி காரு என்று அழைத்த போது தமிழகத்தை போல அரங்கமே அதிர்ந்தது.
இந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மேடையில் தெலுங்கிலேயே பேசினார்.
என்.டி.ஆரின் படங்கள் குறித்தும் என் டி ராமராவ் அரசியல் குறித்தும் அவருடன் தனது நட்பு குறித்தும் ரஜினிகாந்த் தெலுங்கில் பேசி அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/shorts/-n-mp1pd7EU
Rajini speech in Telugu at NTR 100 Event