தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது.
அதில் நடிகர் ரஜினிகாந்த பேசினார். அவர் பேசியதாவது…
எல்லா கலைகளை விட சிறந்தது இசை கலைதான்.
இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உள்ளது. சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும், அது தானாகவே உருவாகும்.
இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர், அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.
அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார் என்று தான் கூப்பிடுவேன்.
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார் இளையராஜா.
அந்த நிமிடத்திலிருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை, அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார்,
எனது படங்களை விட கமல் படங்களுக்கு தான் மிக அருமையான இசைகளை கொடுத்தார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட இளையராஜா, இவர் இப்படி சொல்றார், அவரை (கமலை) கேட்டால் ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என்றார்.
அதன்பின்னர் மேடைக்கு வந்தார் கமல்ஹாசன். அப்போது ஆமா என் படத்தை விட ரஜினிக்கு நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார் இளையராஜா என்றார்.