இன்னும் கட்சி ஆரம்பிக்கல; அதான் வரல.. கமலிடம் கூறிய ரஜினி

இன்னும் கட்சி ஆரம்பிக்கல; அதான் வரல.. கமலிடம் கூறிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini not participated in TN Cauvery Farmers meeting conducted by Kamalமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “காவிரி : நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களாய் ஒன்றிணைவோம் என அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திந்தார் கமல்ஹாசன்.

இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக., அதிமுக., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்கவில்லை.

ஆனால் பா.ம.க., சார்பில் அன்புமணி, தினகரன் கட்சி சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், டி.ராஜேந்தர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் விவசாய சங்கத்தின் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினியை கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்திருந்தார் கமல்.

ஆனால் ரஜினி வரவில்லை. இதுகுறித்து கமலிடம் செய்தியாளர்கள் கேட்தற்கு “இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை நான் எப்படி வருவது என்று ரஜினி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இனி வரும் கூட்டங்களில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்பதே என் எண்ணம்” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், இது ஒரு நாளில் முடியும் கூட்டமில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை தட்டி எழுப்பும் கூட்டமாக இருக்கும்.

நாங்கள் எங்களை தமிழர்களாக, விவசாயிகளின் நண்பர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது போன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Rajini not participated in TN Cauvery Farmers meeting conducted by Kamal

ரஞ்சித் தயாரிப்பில் சம்படி ஆட்டம் போடும் பரியேறும் பெருமாள்

ரஞ்சித் தயாரிப்பில் சம்படி ஆட்டம் போடும் பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Engum Pugazh song from Pariyerum Perumal goes viralஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன.

அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள “பரியேறும் பெருமாள்” திரைப்படம் லைக்கா நிறுவன வெளியீடாக வரவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல், “கருப்பி என் கருப்பி” பிப்ரவரி மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடல் “எங்கும் புகழ் துவங்க…” வெளியாகியுள்ளது.

அசல் கிராமத்தையும் கிராமத் திருவிழாவையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப்பாடலில் 90களில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற சம்படி ஆட்டக்கலைஞராக கலக்கிய அந்தோணி தாசன் மற்றும் இன்று கொண்டாடப்படும் சம்படி ஆட்டக்கலைஞரான கல்லூர் மாரியப்பன் இருவரின் பாடலுடன் கதைநாயகன் கதிர், கதைநாயகி ஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போடும் ஆட்டமும் அப்படியே ஒரு கிராமத்து விழாவில் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

சான்டி நடனம் அமைத்திருக்கும் இப்பாடலை எழுதி இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.

‘சம்படி’ ஆட்டத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குநர் மாரி செல்வராஜின் ஆசையை மிக சிறப்பாக நிறைவேற்றி வைத்திருக்கிறாரார்களாம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்.

Engum Pugazh song from Pariyerum Perumal goes viral

தன் ரசிகர் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

தன் ரசிகர் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிலம்பரசன்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை பாடி, ஆடி நடித்திருக்கிறார்.

தற்போது முன்னணி நாயகர்களின் வரிசையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தாலும் இவரது சமீப கால படங்கள் வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் இவருக்கான ரசிகர் கூட்டம் எப்போதும் குறையாமல் கூடிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் சிம்புவின் ரசிகர் மதன் என்பவர் மரணமடைந்து விட்டார்.

முதன்முறையாக எந்த நடிகரும் செய்யாத ஒரு காரியத்தை தன் ரசிகருக்காக சிம்பு செய்துள்ளார்.

அந்த ரசிகரின் 16ஆம் நாள் நினைவு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரே தெருக்களில் ஒட்டியுள்ளார்.

தற்போது அது தொடர்பான படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கதாநாயகனாக நடிக்கும் விவேக்கு கைகொடுக்கும் சிம்பு-விஷால்-கார்த்தி

கதாநாயகனாக நடிக்கும் விவேக்கு கைகொடுக்கும் சிம்பு-விஷால்-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ezhumin poster‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும் படம் எழுமின்.

வையம் மீடியாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21-ஆம் தேதி நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி-யில் இணைந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி-யில் இணைந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balaji and Nanjil Sampathரேடியோவில் ஆர்.ஜே. வாக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

சில தினங்களாக இவர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

அது அரசியல் கட்சி இல்லை ஏதாவது பட அறிவிப்பாக இருக்கும் எனவும் சிலர் கருத்து கூறி வந்தனர்.

அதன்படி அவர் கதை எழுதி நாயகனாக நடிக்கும் எல்கேஜி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த எல்கேஜி என்ற தலைப்பில் கட்சி கொடியை போன்று வண்ணங்களும் ஜல்லிக்கட்டு காளை படமும் இடம் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் பேசப்போகும் இப்படத்தில் அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத் நடிக்க, படத்தின் நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

ஒரு டீ கடை வைத்து தற்போது நாட்டின் முதல்வராக உயர்ந்துள்ள நரேந்திர மோடி கதையை சித்தரிக்கும் வகையில், ஆர்.ஜே.பாலாஜி ஒரு டீ கடையில் இருப்பதும், அதன் பின்னர் பாராளுமன்ற வாசலில் அவர் நிற்பதும் போன்ற படங்களை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் படங்கள்

வீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

veerama devi first look posterஆபாச படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வந்தவர் நடிகை சன்னி லியோன்.

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் உருவானாலும் கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதற்கு முக்கிய காரணம் சன்னி லியோனுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசுதான் என கூறப்படுகிறது.

More Articles
Follows