தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.
ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்..
ஆனால் அவரது ரசிகர்கள், அவரது வீடு முன் அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Rajini fans protest infront of Rajinikanth house