தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்தவர் ரஜினிகாந்த். அதன் பிறகு அவரது அண்ணன் சத்திய நாராயணா பாதுகாப்பில் வளர்ந்தார். எனவே தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ரஜினிகாந்த்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினிகாந்த் அப்போதும் அனைவருக்கும் நன்றி கூறும் போது மறவாமல் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தன் அண்ணன் பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
அதுபோல தன் தம்பி ரஜினி மீது அளவற்ற பாசம் வைத்திருப்பவர் சத்யநாராயணன்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கருவலூர் கருணாகர வெங்கட்ராமன் பெருமாள் கோயிலில் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை செய்துள்ளார் சத்திய நாராயணா.
Rajini brother Sathya Narayana done Archanai at Perumal Temple