தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
25 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார் ரஜினிகாந்த்.
அதனையடுத்து தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்நிலையில் சிலரை ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் கட்சியை விட்டு நீக்கினார். இது ரஜினிக்கு தெரியாமல் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…
என் அனுமதியில்லாமல் எதுவும் நடக்கவில்லை. நாம் மற்றவர்களை போல் அரசியல் செய்ய வரவில்லை.
ரசிகர் மன்றத்தில் இருந்தால் மட்டுமே பதவி தர முடியாது. அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன்.
பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.