தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாப்படுகிறது.
காலை நேரத்தில் சந்தோஷமாக கொண்டாடப்பட்ட அந்த வேளையில், இலங்கையில் சர்ச் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்த வெடிகுண்டுகள் வெடித்தன.
கிட்டதட்ட 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 210 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர தாக்குதலுக்கு நல்ல உள்ளங்கள் அனைவரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் பதிவில்… ”ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” எனக் கூறியுள்ளார்.
கமல் பதிவிட்டுள்ள பதிவு இதோ…
Kamal HaasanVerified account @ikamalhaasan
Violence can never be the final solution to human disagreements. Ironic that the island that spawned the word serendipity is not able to find it. My deepest sympathies to those affected by the bombs in Srilanka. The government should be impartial and swift in rendering Justice.
Rajini and Kamal condemns Sri lanks bomb blasts