தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உத்தரப் பிரதேச மாவட்டத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்தார் 19 வயது இளம்பெண்.
அந்த பெண்ணை 4 இளைஞர்கள் தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கினர்.
இதனையடுத்து மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு உடலை கொடுக்காமல் இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீசாரே எடுத்துச் சென்று நள்ளிரவில் எரித்தனர். அவர்களின் மொழியில் சொன்னால் தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (இருந்தும் என்ன ஆகப் போகிறது.?)
இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்றார்.
அவருக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில்… யமுனா விரைவுச் சாலையில் நடந்தே சென்றால்.
அப்போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
காவல்துறை எதிர்ப்பையும் மீறி சென்றபோது காவல்துறை அதிகாரி ராகுல் காந்தியின் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளிவிட்டார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதுகுறித்து தெரிவித்த ராகுல் காந்தி…
‘காவல்துறையினர் என்னை தள்ளிவிட்டனர். என்னை லத்தியால் தாக்கினர்.
இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடந்துச் செல்லனுமா? சாதாரண மனிதன் நடக்கக்கூடாதா?
எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. எனவே நடந்து செல்ல தொடங்கினோம்’ என தெரிவித்தார் ராகுல் காந்தி.
பின்னர், விதிகளை மீறியதாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை உபி. காவல்துறையினர் கைது செய்தனர்.
Rahul gandhi arrested on way to town claims police baton charged him