‘மகாராஜா’ பட திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணம் – நட்ராஜ்

‘மகாராஜா’ பட திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணம் – நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50வது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது.

இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் முதலாவதாக பேசிய இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத்… ” விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது.

‘குரங்கு பொம்மை’ படத்திலேயே நிதிலன் அட்டகாசம் செய்திருப்பார். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. இரண்டு மெலோடி பாடல்கள் படத்தில் உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்,…

” படத்தின் கதை மிக அருமையாக வந்திருக்கிறது. நான் செய்த அனைத்து டார்ச்சர்களையும் பொறுத்துக் கொண்ட விஜய் சேதுபதி சாருக்கு நன்றி. நட்டி சார் அனுராக் கஷ்யப் சார் என பெரிய டெக்னீஷியன்களுடன் பணி புரிந்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். ‘மஹாராஜா’ தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

எடிட்டர் ஃபிலோமின் ராஜ்..

“இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சேது அண்ணாவுடன் முதல் படம் எனக்கு. நிதிலன் சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘குரங்கு பொம்மை’ படத்தின் இன்னொரு வெர்ஷனாக இன்னும் ஸ்பெஷலாக இந்த படம் இருக்கும்.

நடிகர் நட்டி…

“‘மஹாராஜா’ தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமையும். இந்த படத்தின் திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை செய்தனர். நிதிலன் இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா படம் இயக்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார்”. என்றார்.

மஹாராஜா

Maharaja will be example for good screenplay says Natty

விஜய்யின் ஆக்சன் காட்சிகளை சிங்கிள் ஷாட்டில் படமாக்கிய லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் ஆக்சன் காட்சிகளை சிங்கிள் ஷாட்டில் படமாக்கிய லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், இங்கிலாந்தில் ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேல் ‘லியோ’ திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் ‘லியோ’ படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் (single shot) எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vijay’s leo movie a fight scene shot in single take

OFFICIAL 4 நாட்களில் ரூ 520 கோடியை வசூலித்தது ஷாரூக்கானின் ‘ஜவான்’

OFFICIAL 4 நாட்களில் ரூ 520 கோடியை வசூலித்தது ஷாரூக்கானின் ‘ஜவான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 7ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தயாரித்து நடித்த ‘ஜவான்’ படம் வெளியானது.

இந்த படத்தை தமிழக இயக்குனர் அட்லி இயக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைக்க ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

பொதுவாகவே அட்லீ இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் பல படங்களை காப்பி அடித்து எடுப்பதாக குற்றச்சாட்டு எழுவது வழக்கம். எனவே ஜவான் படத்திற்கும் பல விமர்சனங்கள் எழுந்தன.

பத்திரிகையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ஜவான்.

இந்த நிலையில் இந்த படம் உலக அளவில் 4 நாட்களில் மட்டும் ரூ 520.79 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹிந்தி சினிமா வரலாற்றில் இது மிகப்பெரிய ரெக்கார்டு எனவும் கூறப்படுகிறது.

Jawan collected Rs 520 cr in box office within 4 days

ஹைப்பர்லிங்க் பாணியில் ‘மூன்றாம் கண்’.; விதார்த் – கலையரசன் – சந்தோஷ் கூட்டணி

ஹைப்பர்லிங்க் பாணியில் ‘மூன்றாம் கண்’.; விதார்த் – கலையரசன் – சந்தோஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், உருவாகும் திரில்லர் திரைப்படமான “மூன்றாம் கண்”.

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் திரைப்படம் “மூன்றாம் கண்”.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், மிக சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது.

கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று, காட்சியளிக்கிறார்கள். மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்குகிறார்.

கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் R.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

பின்னணி இசைக்கோர்வையை ராஜ்பிரதாப் செய்கிறார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்குக் கலை இயக்கம் செய்கிறார். இப்படத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

விரைவில் போஸ்ட் புரடக்சன் துவங்கவுள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாகும்.

மூன்றாம் கண்

Kalaiyarasan Vidharth Santhosh Prathap starrer Moondram Kan

சுசி கணேசன் இயக்கிய உபி போலீஸ் ஸ்டோரி.; டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடல்

சுசி கணேசன் இயக்கிய உபி போலீஸ் ஸ்டோரி.; டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின் “தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது .

செப்டம்பர் 12 ம் தேதி world Premier ஆக திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது .

உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங் , அக்‌ஷய் ஓபராய் , ஊர்வசி ரவ்ட்டேலா நடிதிருக்கிறார்கள் . எம் . ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார் .

தில் ஹெ கிரே

கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சோசியல் மீடியா உலகத்தில் , அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் பேசும் போது…

“இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிலும் , முதல் காட்சி , டொராண்டோ திரைப்டவிழாவில் திரையிடப்படுவது , உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது “ என்றார்.

பிரத்யேக காட்சியில் பங்கேற்பதற்காக , சுசி கணேசன் , இணை தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன் , நடிகை ஊர்வசி ரவ்ட்டேலா கனடா செல்கிறார்கள்.

NFDC – யின் “ இந்தியன் பெவிலியன் “ துவக்க விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் வெளியாகும் “ தில் ஹே கிரே” இத்திரைப்படவிழாவில் , வியாபார ரீதியாகவும் , கலை நயம் ரீதியாகவும் அழுத்தமான இடத்தைப் பிடிக்குமென எதிர்பாக்கப்படுகிறது.

ஊர்வசி ரவ்ட்டேலா

Dil Hay Gray will be screened in Tiff festival

AR RAHMAN CONCERT குளறுபடிகள்.; போலீஸ் விசாரணை.. கட்டணத்தை திருப்பி அளிக்க ACTC முடிவு

AR RAHMAN CONCERT குளறுபடிகள்.; போலீஸ் விசாரணை.. கட்டணத்தை திருப்பி அளிக்க ACTC முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அருகே உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 40 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் மாறாக ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

ரூ 2000 5000 10,000 விலையிலான டிக்கெட் அதிகப்படியாக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது .

முறையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு அமைக்கப்படாத காரணத்தினால் இருக்கைகளை ரசிகர்கள் தூக்கிச் சென்றனர். மேலும் டைமண்ட் பிளாட்டினம் என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் குளறுபடி காரணமாக வெவ்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் அமர்ந்தனர்.

மேலும் அங்கு முறையான பார்க்கின் வசதிகள் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இவை மட்டுமில்லாமல் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி அரங்கத்திற்கு வெளியே மிகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. எனவே போக்குவரத்து நெரிசல் காரணமாக முதலமைச்சரின் வாகனமும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த இடத்தை தாம்பரம் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்த பின் விவரங்கள் தெரியவரும்.

இந்த நிலையில் “இந்த குளறுபடிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.” என ஏ ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஏ சி டி சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ஏ ஆர் ரகுமான்.

AR Rahman concert issue Police enquiry at spot

கூடுதல் தகவல்..

ARR நிகழ்ச்சி – டிஜிபி உத்தரவு

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு;

இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு.

கூடுதல் தகவல்கள்…

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ்‌…!

இசை நிகழ்ச்சி குளறுபடி எதிரொலி ACTC ஏற்பாட்டாளர் ஹேம்நாத் மற்றும் அவரது மனைவி யாழினி மற்றும் மற்றும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆர்ச்சிட் உரிமையாளர் பூங்கொடி ஆகியோர் நேரில் ஆஜராக கானாத்துர் காவல் ஆய்வாளர் சதீஸ் உத்தரவு..

More Articles
Follows