டி.ஆர் இப்படி செய்வது சரியல்ல..; விஷால் தலைவரானதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினைகள்… – சிவசக்தி பாண்டியன் ஆவேசம்

டி.ஆர் இப்படி செய்வது சரியல்ல..; விஷால் தலைவரானதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினைகள்… – சிவசக்தி பாண்டியன் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siva shakthi pandianதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல்.

1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தேனாண்டாள் முரளி தலைமையிலான எங்கள் அணியில் ஆர்.கே.சுரேஷ், கேஜே.ராஜேஷ் போன்ற இளையவர்களும் ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்ளிட்ட அனுபவசாலிகளும் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்குப் பெரும்பலம்.எனவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

2. எதிரணியில் டி.ராஜேந்தர் இருக்கிறாரே?

அவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர். இப்போது விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது இங்கு வந்து போட்டியிடுவது எதனால்? இதற்கடுத்து இயக்குநர்கள் சங்கம் சரியில்லை என்று ்அங்கு போவாரா? அதற்கடுத்து நடிகர்கள் சங்கம் சரியில்லை என்று அதில் போட்டியிடுவாரா?

கடவுள் நமக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதை நிறைவாகச் செய்யவேண்டும். அதைவிடுத்து அடுத்தடுத்து என்று போனால் எல்லாம் வீணாகும்.

நாங்கள் ஓட்டுக் கேட்டுப் போகும் எல்லா இடங்களிலும் டிஆர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று கவலையுடன் கேட்கிறார்கள்.

3. இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனியாக இருக்கிறதே?

விஷால் தலைவராக இருந்தபின் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடு முடங்கியது. அட்ஹாக் கமிட்டியால் முக்கிய முடிவுகள் எடுக்கவியலாது.

இதனால் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பல சிக்கல்கள். அதனால் உடனடியாக அப்படி ஒரு சங்கம் உருவானது.

ஆண்டவன் அருளால் நாங்கள் வெற்றி பெற்ற பின்பு அவர்களோடு பேசி பிரிந்த சங்கத்தை ஒன்றாக்குவோம்.

4. இராம.நாராயணனோடு பணிபுரிந்தீர்கள்.இப்போது அவர் மகனோடு இணைந்திருக்கிறீர்கள். பயணம் எப்படி இருக்கிறது?

அண்ணன் இராமநாராயணன் அவர்கள் மிகுந்த ஆற்றல் உடையவர். அமைதியாக அதே சமயம் மிக ஆளுமையுடன்
செயலாற்றுவார்.

மேசையைத் தட்டி சத்தமாகப் பேசாமலே எதிராளியைப் பணிய வைக்க முடியும் என்பது உட்பட பல நல்ல விசயங்களை அவரிடம் கற்றேன்.

முரளி மிக நல்ல பண்பாளர். சொந்தப்பணத்தில் நற்பணிகள் செய்யக்கூடிய நல்ல மனசுக்காரர்.

அவருக்கு உறுதுணையாக இருந்து
செயலாற்ற இணைந்திருக்கிறேன்.

5. இராம.நாராயணன் காலத்தில் நீங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்தீர்கள் என்று சொல்லப்படுகிறதே?

பட வெளியீட்டு நேரத்தில் பைனான்சியர், விநியோகஸ்தர், டெக்னீசியன் உட்பட பல தரப்பட்ட சிக்கல்கள் வரும்.

அவை சம்பந்தமாகப் பேசும் போது சில நேரம் கெஞ்சுவோம், சில நேரம் மிஞ்சுவோம். தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க சத்தமாகப் பேசியதையே கட்டப்பஞ்சாயத்து என்று சொல்லிவிட்டார்கள்.

தயாரிப்பாளர்களின் நலன்களுக்காகவே நான் பேசினேன் என்பதால் இந்தப் பேச்சுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

6. அப்போதைய முதல்வர் கலைஞரோடு நெருக்கமாக இராமநாராயணன் இருந்ததால் சங்கத்துக்குள் அரசியல் தலையீடு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் தவறான தகவல். தலைவர் கலைஞரோடு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சிறு படங்களுக்கு மானியம், நலத்திட்ட வாரியம், பையனூரில் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரைக் கலைஞர்கள் ஆகியோருக்கு வீடு கட்டவும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும ஸ்டுடியோ அமைக்க இடம்கொடுத்து அரங்கம் அமைக்க உதவினார் தலைவர் கலைஞர்.

அங்கே தொழிலாளர்களிடம் முதலாளிகள் அனுமதி பெற்று படப்பிடிப்புகள் நடத்துகிறோம். உலகிலேயே எங்கும் இல்லாத இந்த நல்ல அதிசயம் நடத்தியவர் கலைஞர்.

அதுமட்டுமின்றி இன்றைக்கு மாடமாளிகை கூடகோபுரமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம் இயங்கும் திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் கலைஞர் அவர்களின் முயற்சியால் நடந்தது.
அதற்குக் காரணம் அண்ணன் இராமநாராயணன்.

இன்றைய ஆட்சியாளர்களும் திரைப்படத்துறைக்கு நல்ல விசயங்கள் செய்கிறார்கள். ஆகவே எங்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் அனுசரனையுடன் சங்கத்தைக்கு நல்லது செய்வோம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டியதில்லை.

7. நீங்கள் படம் தயாரிப்பது குறைந்துவிட்டதே?

படத்தயாரிப்புச் செலவுகள் பன்மடங்கு அதிகமாகிவிட்டதால் அதை குறைத்துக்கொண்டு விநியோகத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

8. அர்ஜுனன் காதலி படம் என்னவானது?

பல காரணங்களால் தாமதமான அந்தப்படம் இப்போது முழுமையாகத் தயாராகிவிட்டது. 2021 சனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடவிருக்கிறோம்.

9. தொடர்ந்து வேறு படங்கள் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா?

நல்ல கதைகள் அமைந்தால் படத்தயாரிப்பில் இறங்குவேன். அடுத்த ஆண்டு நிச்சயம் அது நடக்கும்.

Producer Siva Shakthi Pandian blames TR

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி வருமானம்..; தேர்தல் அறிக்கையிலேயே நிழல் பட்ஜெட் போட்ட சிங்காரவேலன்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி வருமானம்..; தேர்தல் அறிக்கையிலேயே நிழல் பட்ஜெட் போட்ட சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singaravelanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர்.

இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டு துணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன். இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் சங்க வளர்ச்சிக்கு, உறுப்பினர்கள் நலனுக்காக எந்த முன்முயற்சியும் எடுக்காதவர் என்கிற அதிருப்தி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

இராம நாராயணன் தலைவராக இருமுறை பதவியில் இருந்த போது செயலாளராக பதவியில் இருந்தவர் சிவசக்தி பாண்டியன் அவரது பதவி காலத்தில் உறுப்பினர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை சமரசம் இன்றி அணுகியவர் எவருக்கும் பாதிப்பு இன்றி சமரச தீர்வுகாண முயற்சித்தவர் என்கிற நற்பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது. ((இருந்தபோதிலும் பல நேரங்களில் அதிகார தொனியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் என்கிற கெட்ட பெயரும் இவருக்கு இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது )).

கடந்த ஐந்தாண்டுகளில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரியாதது இவருக்கு பலவீனமாக உள்ளது.

P.T.செல்வகுமார், அடிதடி முருகன் இருவரையும் அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்களுக்கான ஆதரவு அலை தனிப்பட்ட முறையில் இல்லை அணியின் சார்பில் கிடைக்க கூடிய வாக்குகள் இவர்கள் இருவரையும் கடும் போட்டியாளராக களத்தில் நிறுத்தவில்லை.

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட R.K.சுரேஷ் கடும் போட்டியாளராக களத்தில் உள்ளார் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் தனிப்பட்ட முறையில் வாக்காளர்களை சந்தித்து கரன்சி கவனிப்பு மூலம் கவர்ந்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

சுயேச்சையாக போட்டியிடும் மதியழகன் தேர்தல் களத்தில் இருக்கிறாரா? என பூதகண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது.

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவேலன்.

வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வரும் இவர் எனக்கு ஓட்டளிப்பதற்கு உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் அனைவரது நலனுக்காக போராடுவேன் முதல்முறையாக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது

கடந்த காலங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் குறிப்பாக கதிரேசன், கலைப்புலி தாணு இருவரும் சங்கத்துக்கு வர வேண்டியவருமானத்தை மடைமாற்றிவிட்டதையும், சங்கத்தின் உரிமைகள், கௌரவம் பறிபோன போது தடுக்காமல் கள்ள மௌனம் சாதித்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டு வருவது கதிரேசனுக்கு எதிரான அலையை அதிகரித்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக சிங்காரவேலன் அறிவித்து உள்ளது தேர்தல் களத்தில் கடும் அதிர்வலையையும், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என விசாரித்தபோது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில் இருக்கும்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும்.. அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனமும் சிங்காரவேலன் பக்கம் திரும்பும்.. சாதாரண வேட்பாளராக இரண்டு அணிகளாலும் அலட்சியமாக பார்க்கப்பட்டவர் முதல் சுற்றில் வெற்றிபெறும் வேட்பாளராக முந்துவது நிச்சயம் என்கிறது சிங்காரவேலன் ஆதரவு வட்டாரம்

தேர்தல்களநிலவம் பற்றி மூத்த தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது…

சிங்காரவேலன் ஆர்வக்கோளாறில் போட்டியிடுவதாகவே நினைத்தோம் எங்களிடம் வாக்கு கேட்க வந்தபோது அவரது அணுகுமுறை, ஆக்கபூர்வமான திட்டங்கள் அதனை அமுல்படுத்த நிதி வரவுக்கான திட்டமிடல் ஆகியவற்றை கேட்டபோது எங்களுக்கு பிரமிப்பு உண்டானது.

” இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த” என கேட்க வேண்டியதாயிற்று. புதிய இளைஞர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தருவதில் தவறில்லை என்றனர்.

இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்…

Producer Singara Velan on TFPC election

எஸ்ஏசி தொடங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலத் தலைவரும் ராஜினாமா.; கட்சியில இப்போ எத்தனை பேர்.?

எஸ்ஏசி தொடங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலத் தலைவரும் ராஜினாமா.; கட்சியில இப்போ எத்தனை பேர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளிக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பதிவு தான்

சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.

அந்த கடிதத்தில்…. தனது சிரமத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் சாதாரண உறுப்பினராக இருக்க தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எஸ்ஏசி உள்பட கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

SAC Vijay

Another big shock for Vijay father SA Chandrasekar

லோகேஷ் அடுத்த அட்லியா..? மாஸ்டர் படக்குழு கமலை சந்தித்தால் மெர்சலுக்கு கிடைத்த அவமானம் தான் மிஞ்சும்.!

லோகேஷ் அடுத்த அட்லியா..? மாஸ்டர் படக்குழு கமலை சந்தித்தால் மெர்சலுக்கு கிடைத்த அவமானம் தான் மிஞ்சும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்.

தான் இயக்கிய ‘கைதி’ படத்தில் சில காட்சிகளை எடுக்க ‘விருமாண்டி’ படம் தான் உதவியது என லோகேஷ் ஒரு முறை தெரிவித்திருந்தார்.

லோகேஷ் இயக்கிய கமலின் ‘விக்ரம்’ பட டைட்டில் டீசர் கூட நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வெப்சீரிஸ் காப்பி தான் என தெரிய வந்துள்ளது.

அண்மையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட டீசர் வெளியானது. அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான நம்மவர் பட காலேஜ் காட்சிகளை அப்படியே நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

கமல் கேரக்டரில் விஜய், கௌதமி கேரக்டரில் மாளவிகா, கரண் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் என பல ஒற்றுமைகள் உள்ளன.

மேலும் காலேஜில் நடக்கும் கலவரம், அதை அடக்க வரும் புரொபசர் என பல காட்சிகளும் ஒத்து வருகின்றன.

ஆனால் வில்லன் விஜய்சேதுபதி கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே லோகேஷ் அடுத்த அட்லியாக உருவாகி வருகிறாரோ.? என ரசிகர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்.

சில வருடங்களுக்கு முன் ‘மெர்சல்’ படக்குழு கமலை சந்தித்தனர். அப்போது போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னணியில் ‘அபூர்வ சகோதரர்கள்’ பட போஸ்டரை வைத்திருந்தார் கமல்.

அப்போதே பலரும் ‘அபூர்வ சகோதரர்கள்’ பட காப்பி தானே ‘மெர்சல்’. அதான் கமல் படக்குழுவை மறைமுகமாக கலாய்த்துள்ளார் என்றனர்.

ஒருவேளை ‘மாஸ்டர்’ படக்குழு கமலை இந்த முறை சந்திக்க சென்றால் சந்திப்பின் பின்னணியில் ‘நம்மவர்’ பட போஸ்டரை கமல் வைத்திருக்க கூடும்.

எனவே விஜய் லோகேஷ் & விஜய்சேதுபதி ஆகியோர் உஷாராக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Mersal Kamal Haasan

Is Vijay’s Master inspired by Kamal Haasan’s Nammavar?

கேன்சரால் தவசி அவதி..; ரஜினி நலம் விசாரிப்பு.. சிவகார்த்திகேயன் உதவி

கேன்சரால் தவசி அவதி..; ரஜினி நலம் விசாரிப்பு.. சிவகார்த்திகேயன் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thavasi actor cancer‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் தவசி.

தற்போது இவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.

அண்மையில் வெளியான புகைப்படத்தல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

மேலும் அவரின் சிகிச்சைக்கு போதிய பணமின்றி கஷ்டப்படுவதால் பண உதவியை நாடியிருக்கிறார்.

விஜய்சேதுபதி ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது- தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் மூலம், அவர் இந்த உதவியை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து தவசியை தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Celebrities help to Tamil actor Thavasi

நயன்தாரா பிறந்தநாளில் காதலர் விக்னேஷ் சிவனின் ‘டீசர்’ ட்ரீட்

நயன்தாரா பிறந்தநாளில் காதலர் விக்னேஷ் சிவனின் ‘டீசர்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிஜத்தில் காதலர்களாக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நயன்தாரா மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

நெற்றிக்கண் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

‘அவள்’ பட இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார்.

அஜ்மல் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கிரிஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி காலை 9.03 மணிக்கு இப்பட டீசரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் விக்கி.

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் தழுவல் தான் ‘நெற்றிக்கண்’ என ஒரு தகவலும் கோலிவுட்டில் உலா வருகிறது.

Netrikkan teaser to release on Nayanthara birthday

netrikan nayanthara

More Articles
Follows