ஹீரோவை விட அதிக சம்பளம் பெறும் வில்லன்..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

ஹீரோவை விட அதிக சம்பளம் பெறும் வில்லன்..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசின்ன சின்ன வேடங்களில் வந்து செல்லும் துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் விஜய்சேதுபதி.

கதையின் நாயகனாக இவரின் அறிமுக படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ இந்தியளவில் பேசப்பட்டது.

பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் முதல் சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் விஜய்சேதுபதியை வித்தியாச சேதுபதியாக மாற்றியது.

ஈகோ பார்க்காமல் இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை என பல தோற்றங்களில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகராகிவிட்டார்.

இப்போதும் கூட காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

சினிமாவில் அவரின் அந்தஸ்து உயர உயர சம்பளமும் எகிறி வருகிறது.

இதுவரை 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியவர் விஜய்சேதுபதி.

தற்போது ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் அதில் நாயகனாக நடிக்கும் இந்தி நடிகர் ஷாகித் கபூரை விட அதிக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

ஹீரோவுக்கு சம்பளம் ரூ.40 கோடி என கூறப்படுகிறது.

இந்த தொடரில் விஜய்சேதுபதிக்கு வில்லன் வேடமாம். இந்த தொடரில் ராஷிகன்னா நாயகியாக நடிக்கிறார்.

Vijay Sethupathi gets more salary than hero of the film

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash vetrimaaran (1)புதுடெல்லியில் கடந்த 75 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.

இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.

இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வெளிநாட்டினர் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழக திரை பிரபலங்கள் எவரும் இது குறித்து பேசவில்லை.

இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகள் போராட்டம் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

தன் ட்விட்டர் பதிவில்…

“போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம்.

மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது…

“ஆள்பவர்களுக்கு மக்கள்தான் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த அதிகாரம் மக்களின் நலனைக் காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது.

தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கவே விவசாயிகள் முயற்சி செய்கின்றனர். தங்களுடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதே ஜனநாயகம் ஆகும்”.

இவ்வாறு வெற்றிமாறன் பதிவிட்டுள்ளார்.

GV Prakash and Vetrimaaran supports Farmers

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjithஇயக்குனர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து

“குதிரைவால்” திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது.

தொடர்ந்து “ரைட்டர்” & “பொம்மை நாயகி” படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் “சேத்துமான்” எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் ( IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காக தேர்வாகியிருக்கிறது “சேத்துமான் ” திரைப்படம்.

தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ்

ஒளிப்பதிவு- பிரதீப் காளிராஜா

எடிட்டிங் – CS பிரேம் குமார்.

இசை – பிந்து மாலினி.

பாடல்கள்- யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல்.

கலை- ஜெய்குமார்.

சண்டை – ஸ்டன்னர் சாம்.

ஒலி வடிவமைப்பு- ஆண்டனி BJ ருபன்.

கதை ,வசனம் – பெருமாள் முருகன்.

திரைக்கதை இயக்கம்- தமிழ்

தயாரிப்பு – பா.இரஞ்சித் .

பி ஆர் ஓ – குணா.

Pa Ranjith’s next film is titled Sethu Maan

‘குட்டி ஸ்டோரி’ பிரஸ் மீட்டில் 4 டைரக்டர்களுடன் புரொடியூசர் கொடுத்த சுவாரஸ்ய தகவல்கள்

‘குட்டி ஸ்டோரி’ பிரஸ் மீட்டில் 4 டைரக்டர்களுடன் புரொடியூசர் கொடுத்த சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kutty Storyவேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல் தொகுப்பை கௌதம் மேனன் இரண்டாவது தொகுப்பை விஜய் மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்துள்ளனர்

குட்டி ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் Dr.ஐசரி .K. கணேஷ் பேசுகையில்…

” நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாக தோன்றியது உடனே ஒப்புக்கொண்டேன் முதல் முறையாக நான்கு பெரிய இயக்குனர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது.

பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம் என்றார்

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில்…

“நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது.

இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம்.

நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன் கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார்.

முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையை முடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது என்றார்

இயக்குனர் விஜய் பேசுகையில்…

முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது.

மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது இந்த கதைக்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது.

உடனே அவரிடம் கதையை சொன்னேன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார்.. நான் ஏழு நாட்களில் இந்த கதையை படமாக்கினேன் முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம் என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில்…

முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜிபடத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது..

அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன் ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்.

இயக்குனர் நலன் குமாரசாமி பேசியதாவது…

“லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.

அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன்.

இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதி இடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன்..

அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார்… மற்ற இயக்குனர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர் நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன்.

11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன் ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார்..

ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார். நாங்கள் நினைத்தது போலவே இந்த கதை அமைந்துள்ளது என்றார்.

Producer’s interesting speech at Kutty Story press meet

‘டான்’ படத்தில் வெற்றி கூட்டணி..: கலாய்த்த சிவகார்த்திகேயனுக்கு செம கவுண்ட்டர் கொடுத்த சூரி

‘டான்’ படத்தில் வெற்றி கூட்டணி..: கலாய்த்த சிவகார்த்திகேயனுக்கு செம கவுண்ட்டர் கொடுத்த சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan sooriசிவகார்த்திகேயன் & சூரி இணைந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது.

இந்த படங்களில் ஹீரோயினை விட சூரியுடன் தான் செம கெமிஸ்டரியில் இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த வெற்றி கூட்டணி தற்போது ‘டான்’ படத்தில் இணைகிறது.

இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இதனால் டான் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் சந்திப்போம் நண்பா -என்று டுவிட் போட்டார் சூரி.

அதில், ”நண்பா… பஸ்ட் டுவீட்ட ஒழுங்கா படிங்க. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று அவரை கலாய்த்து பதிவிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

இதற்கு கொஞ்சமும் அசராமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட காமெடி காட்சியை பதிலாக பகிர்ந்துள்ளார் சூரி.

Happy to share the scren pace once akain vith my dear most buddy @Siva_Kartikeyan see you at the cambus buddy.. #DON

Buddy first tweeta olunga padi… ambuttum spelling mistake…

Soori’s timing counter to Siva Karthikeyan

‘சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..; ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார் எடப்பாடி

‘சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..; ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார் எடப்பாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Edappadi Palaniswamiஇன்று பிப்ரவரி 5 தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது… வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது.

சட்டசபை விதி 110ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்

பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

கொரோனா மற்றும் இதர புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்,’ என தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு முன் கடந்த 2016ல் ஆண்டில் விவசாய கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TN govt announces Rs 12,110 cr farm loan waiver for over 16 lakh farmers

More Articles
Follows