ஜுங்காவை அடுத்து *ஜாங்கோ* என்ற பெயரில் படம்; சீ.வி.குமார் தயாரிக்கிறார்!

ஜுங்காவை அடுத்து *ஜாங்கோ* என்ற பெயரில் படம்; சீ.வி.குமார் தயாரிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jangoதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இயக்கம் – மனோ கார்த்திக்கேயன்

ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை

இசை – நிவாஸ் பிரசன்னா

படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்

கலை – கோபி ஆனந்த்

காஸ்ட்யும் டிசைனர் – மீனாக்ஷி ஷ்ரிதரன்

சண்டைப்பயிற்சி – ஹரி திணேஷ்

மக்கள் தொடர்பு – நிகில்

கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marmayogi kamalகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

கமல் படங்கள் என்றாலே இறுதிக்கட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும். இதுநாள் வரை இப்படத்திற்கு வராத பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரமீட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்…

மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகவே இல்லை. மேலும் வாங்கிய சம்பளத்தையும் கமல் திருப்பித் தரவில்லை.

எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. எனவே விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீசில் பிரச்சினை உருவாகும் எனத் தெரிகிறது.

அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalசினிமாவில் இருந்தபோதே அதன் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தியவர் கமல்ஹாசன்.

நடிப்பு, இயக்கம், நடனம், பாடல், தயாரிப்பு என எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் திறமையை பளிச்சிட செய்தவர் அவர்.

தற்போது சினிமாவை தாண்டி அரசியல் உலகிலும் பயணித்து வருகிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்து விட்ட பின் மெதுவாக சினிமாவில் இருந்து விலகி, அரசியல் பயணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தனக்கு வாழ்வளித்த சினிமாவில் தொடர்ந்து நீடிக்க ஒரு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளாராம்.

சென்னையில் உலகத் தரத்தில் ஒரு திரைப்பட பள்ளி தொடங்க வேண்டும் என்பதுதானாம் அது.

திறமையான கலைஞர்களுக்கு தரமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அதில் அவர் ஆசிரியராக இல்லாவிட்டாலும் அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என அவர் விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director siva kumarஅர்ஜூன் ரோஜா நடித்த ஆயுத பூஜை மற்றும் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களை இயக்கியவர் சிவகுமார்.

இவர் இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மென்ட் ஒன்றில் இவர் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அரவது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. கொலையா,? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றி பெற, அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சி மீது போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இநத் வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சர்வாதிகாரி டாஸ்க் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பது போன்று உள்ளது என்று கூறி சென்னையை சேர்ந்த வக்கில் லூயிசாள் ரமேஷ் என்பவர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் லூயிசாள் ரமேஷ் கூறியிருப்பதாவது…

விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல் தனது மக்கள் நீதி மையத்தின் கட்சியை வளர்க்க எடுத்துள்ள யுக்தி தான் இந்த நிகழ்ச்சி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இவருடைய ஏற்பாட்டின் படி இந்தவாரம் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக நடிக்கிறார்.

இவர் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களை கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்த தொடரை நடத்தும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனமும், கமலும் கூறுகின்றனர்.

அதைத்தான் இவர்கள் நடித்து காட்டுகின்றனர்.

ஜூலை 31 அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரித்விகா என்ற போட்டியாளர், “இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது” என கூறுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் கமலும், சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக, சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்வதோடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பிலிம் சிட்டியில் விஸ்வாசத்தை தொடங்கும் அஜித்

மீண்டும் பிலிம் சிட்டியில் விஸ்வாசத்தை தொடங்கும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasam ajithவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரித்து வருகிறது. இதையும் சிவா இயக்கி வருகிறார்.

இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க, நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அவருடன் தம்பி ராமையா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தன் இசைப் பயணத்தில் செஞ்சுரி அடித்த இமான் இப்படம் மூலம் அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிறது.

அதன்பின்னர் ராஜமுந்திரியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது மீண்டும் சில காட்சிகளுக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்களாம்.

More Articles
Follows