தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் 1995ல் ராஜாக்கண்ணு என்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து அவரை லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தது.
இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ஜெய் பீம் எனும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் சந்துருவாக நடித்தார்.
இந்த ஜெய்பீம் படமானது இருளர் பழங்குடியினரின் காவலில் சித்திரவதைக்கு ஆளாகியிருப்பதையும், அவர்களுக்காக சூர்யா நடித்த நீதியரசர் சந்துரு எவ்வாறு போராடி வென்றார் என்பதையும் பேசும் படமாக இது அமைந்தது.
இந்நிலையில் இப்படத்தில் உள்ளது போல் நிஜ வாழ்க்கையிலும் கஷ்டப்பட்ட ராஜாக் கண்ணுவின் மனைவி பார்வதியை நேரில் சந்தித்து தனது சார்பில் ரூ. 10 லட்சம், 2D படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ. 5 லட்சம் ஆகியவற்றுக்கான வங்கி நிரந்தர வைப்புத்தொகை ஆவணங்களை வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.
இதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்னிலையில் தன் இல்லத்தில் கொடுத்தார் நடிகர் சூர்யா.
பல ஆண்டுகளுக்கு பின் தனக்கு இந்த உதவிகள் கிடைத்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக பார்வதி (தற்போது பாட்டி) தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக பிரமுகருமான அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு படம் குறித்து 9 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். சூர்யாவுக்கு இதற்கு பதிலளித்து இருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
இதனிடையில் தான் ஜெய்பீம் படத்தில் தங்கள் சமூகத்தை அவமதிப்பு செய்துள்ளதாக வன்னியர் பிரிவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வன்னியர் சமூகத்தை அவதூறாகப் பேசிய ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சிகளை நீக்கக் கோரியும் வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வன்னியர்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை தி.நகரிலுள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Police protection for Suriya house