BREAKING 150 படங்களில் நடித்த ‘பருத்திவீரன்’ செவ்வாழை ராசு மரணம்.; வாழ்க்கை குறிப்பு

BREAKING 150 படங்களில் நடித்த ‘பருத்திவீரன்’ செவ்வாழை ராசு மரணம்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவரது இயற்பெயர் ராசு என்றாலும் இவரது நிறம் காரணமாக செவ்வாழை என்ற பெயர் இவருடன் ஓட்டிக்கொண்டது.

இவர் இதுவரை 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு வயது 67.

‘பருத்திவீரன்’ படம் இவருக்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் புகழை பெற்றுத் தந்தது.

கார்த்தி மற்றும் சரவணன் உடன் இவர் நடித்த ஒரு காட்சி அப்போதே பரவலாக பேசப்பட்டது. விஜய்யுடன் இவர் நடித்திருந்த வேலாயுதம் படம் இவருக்கு 100வது படமாக அமைந்தது.

மேலும் இவர் வல்லமை தாராயோ, மைனா கந்தசாமி, உளவுத்துறை, கருத்தம்மா, மலைக்கோட்டை உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது

பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் கஸ்தூரிராஜா இயக்கிய ‘தாய் மனசு’ என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

பாரதிராஜா மற்றும் கஸ்தூரிராஜா ஆகியோரது இயக்கங்களில் கிட்டத்தட்ட 20 படங்களில் இவர் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர் அளித்த பேட்டியில்.. “நெகட்டிவான கேரக்டர்களின் நடிக்க மாட்டேன் என்றும் கடவுள் மறுப்பு நாத்திகர் வேடத்தில் நடிக்க மாட்டேன் எனவும் இவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் செவ்வாழை ராசு.. உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

Paruthi Veeran actor Sevvazhai Rasu passed away

வட்டி கட்டலேன்னா அந்த குடும்பம் படும் பாடு சொல்லி மாளாது – பாடலாசிரியர் அருண் பாரதி

வட்டி கட்டலேன்னா அந்த குடும்பம் படும் பாடு சொல்லி மாளாது – பாடலாசிரியர் அருண் பாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாரான ‘எறும்பு’ படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் அருண் பாரதி பேசுகையில்…

‘ எறும்பு திரைப்படம் பொருளாதார ரீதியாக சின்ன படம். ஆனால் உள்ளடக்களவில் மிகப்பெரிய படமாக இருக்கும். ஏனெனில் நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். இயக்குநர் சுரேஷ் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்.

படப்பிடிப்பு தளத்தில் உதவியாளர்களைப் போல் ஓடி ஓடி உழைப்பவர். இசையமைப்பாளர் அருண் ராஜ்- சமரசமின்றி நேர்மையாக உழைக்கக்கூடிய இசைக் கலைஞர்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், என்னுடைய பெற்றோர்கள் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு நாள் தவணைத் தொகை கட்டவில்லை என்றால், அந்த குடும்பத் தலைவர் படும் பாடு சொல்லி மாளாது.‌ இவையெல்லாம் படம் பார்க்கும்போது என் நினைவுகளை தூண்டி விட்டது.

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது சார்லியை நேர்காணல் கண்டேன். அப்போது தான் அவரின் இலக்கிய வாசிப்பு குறித்து அறிந்தேன். வியந்தேன். அப்போது அவர் செங்கிஸ்கானின் ‘நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்றொரு குறிப்பை பகிர்ந்து கொண்டார். அந்த வார்த்தைகளை இன்று வரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

‘தண்டட்டி அணிந்த கிராமத்து புதிய பெண்மணிகளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது’ என ஒரு முறை இயக்குநர் சிவா என்னிடம் கூறியிருக்கிறார்.

தற்போது தண்டட்டி அணிந்த முதிய பெண்மணிகள் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் எறும்பு திரைப்படத்தில் அசலாக கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார்கள். இதற்காக படக் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

If you pay interest, that family will not be happy – Lyricist Arun Bharathi

கடன் மோசமான விசயம்.. எனக்கே என் மீது வெறுப்பு வந்தது – எம்எஸ் பாஸ்கர்

கடன் மோசமான விசயம்.. எனக்கே என் மீது வெறுப்பு வந்தது – எம்எஸ் பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாரான ‘எறும்பு’ படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில்…

” வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம்.

இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார்.

என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது.

இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே.. அப்படி இருந்தது.

அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள்.

ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

Debt is a bad thing.. I hated myself – Ms Bhaskar

கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள்.?! – குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக்

கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள்.?! – குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், தயாரிப்பாளர் ரமணி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சக்தி ரித்விக், ஒளிப்பதிவாளர் கே. எஸ். காளிதாஸ், படத்தொகுப்பாளர் எம். தியாகராஜன், இசையமைப்பாளர் அருண் ராஜ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், அருண் பாரதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சுரேஷ் குணசேகரன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில்…

” இந்த ஆண்டில் வெளியான ‘டாடா’, ‘குட் நைட்’ ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களின் ஒரு வரி கதை சிறியதாக இருக்கும். ஆனால் படைப்பு உணர்வுபூர்வமானாக இருந்ததால், பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் ‘எறும்பு’ எனும் இந்த திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெறும்.

இந்தப் படத்தில் ‘நடந்தால் குறையாத தூரம் எங்கே….’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார்.

இசையமைப்பாளர் அருண் ராஜுடன் இணைந்து தனி பாடல்களை ஆல்பமாக உருவாக்கி இருக்கிறோம். ‘பைரி’ என்ற திரைப்படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

‘எறும்பு’ தரமான திரைப்படம். நடிகர் சார்லியின் திரையுலக நடிப்பை கடந்து, அவரது இலக்கிய வாசிப்பும், இலக்கிய ஆளுமையும் எனக்கு பிடிக்கும். ” என்றார்.

இசையமைப்பாளர் அருண் ராஜ் பேசுகையில்…

” இயக்குநர் சுரேஷ் படமாக்கிய காட்சிகளை எமக்கு காண்பித்தார். பிடித்திருந்தால் இசையமைக்கவும் என கேட்டுக்கொண்டார். காட்சிகளை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே இப்படத்திற்கு இசையமைக்கலாம் என தீர்மானித்தேன். காட்சிகளும்.. சொல்ல வந்த விசயமும் தனித்துவமானதாக இருந்ததால், இசையமைக்க ஒப்பு கொண்டேன். இது சிறுவர்களுக்கான படைப்பாக இருந்தாலும், இது கிராமிய மண் மணம் மாறாத படைப்பும் கூட.

இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேசை நான் தன்னம்பிக்கையின் அடையாளமாகவே பார்க்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததால் பின்னணி இசையை ரசித்து ரசித்து அமைத்தேன்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. ஐந்து பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள். அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்கினர். பாடல்கள் அனைத்தும் எளிமையானதாக இருக்கும். ஆனால் இந்த எளிமையை கொண்டு வருவதற்கு அனைவரும் கடினமாக உழைத்தோம். படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சக்தி ரித்விக் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால் கிராமிய படமாக இருக்கும். ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் இது ஒரு உலக அளவிலான திரைப்படம். இதற்காகவே இப்படத்திற்கான இசையை சர்வதேச தரத்தில் தான் அணுகி இருக்கிறேன்.

ஒரு ஈரானிய திரைப்படம்.. துருக்கி திரைப்படம்.. ஐரோப்பிய திரைப்படம்.. ஆகியவற்றை போல் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இணையதளம் மூலம் பிரத்தியேக இசைக் கலைஞரை தேடி கண்டறிந்து அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குழந்தைகளுக்கான படம் என்பதால் நிறைய குழந்தைகளின் குரலை தேடி பதிவு செய்திருக்கிறோம்.

சில திரைப்படங்களில் மட்டும் தான் கற்பனை திறனை பயன்படுத்த முடியும். வணிக சினிமாவில் ஒரு எல்லை இருக்கும். ‘எறும்பு’ போன்ற கலை சார்ந்த படைப்புகளில் பணியாற்றுவது மகிழ்ச்சியானதாக இருந்தது. ” என்றார்.

குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக் பேசுகையில்….

” இந்தப் படத்தில் கிராமத்தில் இயல்பாக இருக்கும் சிறுவர்கள். கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களின் ஒரு மோதிரம் காணாமல் போய்விடுகிறது. அந்த மோதிரத்தை வாங்க அக்கா- தம்பி இருவரும் எப்படி கஷ்டப்பட்டார்கள்.. அவர்கள் வாங்கினார்களா? இல்லையா? என்பதே ‘எறும்பு’ படத்தின் கதை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது.

ஒரு கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள் என வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இந்தப் படத்தில் தான் நான் முதல் முறையாக முயலை பார்த்தேன். தொடக்கத்தில் தயக்கமும், பயமும் இருந்தது. அதன் பிறகு அதனுடன் பழகிவிட்டேன். ஒருமுறை முயல் எனது வலது கையில் கீறி விட்டது. அதன் பிறகு படப்பிடிப்பில் புதிய முயலுடன் நடிக்க வேண்டியதிருந்தது.

அந்த முயல் மிகவும் கோபமாக இருந்தது. முயலுடன் பழகியதும் மறக்க முடியாததாக இருந்தது. ” என்றார்.

Will there be such a gathering in the village?! – Child star Shakti Rithvik

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட டப்பிங் தொடங்கியது

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட டப்பிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக் & சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ’கிரிமினல்’.

இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனையடுத்து, பூஜையுடன் டப்பிங் பணிகள் துவங்கியது.

‘கிரிமினல்’ படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

இப்படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Gautham Karthik & Sarathkumar’s ‘Criminal’ movie dubbing has started

BHAI Sleeper Cells பட போஸ்டரை வெளியிட்ட 3 மதத் தலைவர்கள்

BHAI Sleeper Cells பட போஸ்டரை வெளியிட்ட 3 மதத் தலைவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கமாக திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம்.

ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே தொரட்டி, தீக்குளிக்கும் பச்சை மரம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் சில மலையாள, தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்தவர். எடிட்டிங் இத்ரிஸ். இந்த படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது…

“நானும் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள். நாங்கள் இணைந்து வேறொரு படத்தினை உருவாக்கத் திட்டமிட்டோம். ஆனால் அதற்கு இரவு நேரத்தில் நிறைய படப்பிடிப்பு செய்ய வேண்டி இருந்தது.கொரோனா காலம் என்பதால் பெரிய சிக்கல்கள் வந்தது.எனவே மாற்றுத் திட்டம் ஒன்று யோசித்தோம்.

அப்படி உருவானது தான் இந்தக் கதை. இதற்கு ஆதவா தான் முன்னெடுப்பாக இந்த யோசனையைக் கூறினார். அதை விரிவு படுத்தி, திரைக்கதை உருவாக்கப்பட்டது.

இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மதம் இருக்கிறது. மதம் என்கிற கருவியை வைத்து மனிதர்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் விரக்தி என்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து ஒரு சித்தாந்தத்திற்கு அடிமை ஆக்கி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள் அதைப்பற்றி இந்தப் படம் பேசுகிறது .

இப்படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம்தான் மேலானது என்பது தான்.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.

இவர் நெடுஞ்சாலை, கருப்பசாமி குத்தகைதாரர், கொக்கி போன்ற படங்களைத் தயாரித்தவர். பத்து தல படத்தில் முக்கியமான காதப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர்.

“பாய் – Sleeper Cells” திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிது, பார்வையாளர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாயகன் ஆதவா ஈஸ்வரா இந்த படத்திற்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து கதாப்பாத்திரத்த உணர்ந்து நல்லா பண்ணிருக்காரு.

இத்திரைப்படத்திற்கான Indoor Location 2 Set போட்ருக்கோம், Outdoor Location அனைத்தும் Live – ஆக படமாக்காப்பட்டது அது தான் படத்திற்கும் தேவைபட்டது, மிகவும் சவாலாக இருந்தது. 23 நாட்களில் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.

இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.PVR பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிட வந்தது எங்களுக்குக் கிடைத்த பெரிய நம்பிக்கை. தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

யாரை வைத்து இதன் போஸ்டர்களை வெளியிடுவது என்று யோசித்தோம். வழக்கமாகச் சினிமா சம்பந்தப்பட்டவர்களை வைத்து வெளியிட்டால் சாதாரணமாகவே தெரியும். பெரிய கவனம் பெறாது என்று நினைத்தோம்.

அதனால் படத்தில் சொல்லப்படும் கருத்தின் வாயிலாகவே வித்தியாசமான முறையில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். எனவே மூன்று வெவ்வேறு மதத் தலைவர்களை வைத்து இதை வெளியிட முயற்சி செய்தோம்.அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்படி இந்து மதத்தின் சார்பாக, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், இஸ்லாம் மதத்தின் சார்பாக இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான கே .ஏ.எம் .முகமது அபுபக்கர் அவர்கள், கிறிஸ்தவ மதத்தின் சார்பில் அப்போஸ்தல சர்ச் ஆப் இந்தியா, பிஷப் டாக்டர் எஸ். எம். ஜெயக்குமார் அவர்கள் என மூன்று மதத் தலைவர்களையும் வைத்து வெளியிட்டோம் .

பொதுவாக ஒருவர் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி .எஸ் .ஆர். சுபாஷ் அவர்களையும் இணைத்து நான்கு பேரை வைத்து இந்தப் படத்தின் போஸ்டரை ஒரு முதியோர் இல்லத்தில் வெளியிட்டோம்.

படத்தின் தலைப்பைப் பார்த்தபோது மூன்று பேருமே தயங்கினார்கள். இது என்ன தலைப்பு இப்படி இருக்கிறது? என்றார்கள்.

ஆனால் நாங்கள் படத்தின் கதையையும் படம் சொல்லும் நோக்கத்தையும் அவர்களிடம் விளக்கிக் கூறிய போது தாங்கள் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும் நம்பிக்கையில் சம்மதித்தார்கள்.
அவர்களுக்கு எங்கள் நன்றி.

இந்த மதத்தின் பெயரால் நடக்கும் இது மாதிரியான தவறான செயல்களைக் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும் அதற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு என்று மூவருமே கூறினார்கள். இதுவே எங்கள் படத்திற்கான முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

“பாய்- ஸ்லீப்பர் செல்ஸ்” திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது.”

இவ்வாறு இயக்குநர் கமலநாதன் புவன் குமார் கூறினார்.

Bhai sleeper cells poster released by 3 religion leaders

More Articles
Follows