விவேகத்தை விட அஜித்தே பெருசு; விஜய்யை பாராட்டிய பார்த்திபன் பல்டி

விவேகத்தை விட அஜித்தே பெருசு; விஜய்யை பாராட்டிய பார்த்திபன் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban statement to ajith fans regarding Mersal audio launch speechவிஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய பார்த்திபன், ‘ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் ஒண்ணு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது.

ஆனா விஜய்யும், அவரது ரசிகர்களும் சேர்ந்தால் அது மாஸ். பின்னர் விஜய் ஒரு மிகச்சிறந்த CM என்றார்.
பின்பு அவரது ஸ்டைலில் CM-ன்னா கலெக்‌ஷன் மன்னன்” என்றார்.

இதனையடுத்து பார்த்திபன் பேச்சுக்கு பல்வேறு ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

முக்கியமாக அஜித் ரசிகர்கள் கைதட்டுறாங்க.. அதுக்காக எப்படி வேண்டுமானலாலும் பேசலாமா? கொடுத்த காசுக்கு மேல கூவுறாரு என பார்த்திபனை கலாய்த்தனர்.

எனவே இது குறித்து பார்த்திபன் அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பதில் கருத்து ஒன்றை கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

“காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை!

வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன்.

“வேகத்தை விட விவேகம் பெருசு-ஆனா விவேகத்தை விட அஜீத்தே பெருசு!”-நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால், சினிமாவுக்கு மட்டுமே ரசிகன்.

‘ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி’-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெர்சலான மெசேஜ்!” என்று பதிவிட்டுள்ளார்.

லதா ரஜினியின் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட் உத்தரவு

லதா ரஜினியின் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Court orders landowners to unseal Latha Rajinis Ashram schoolலதா ரஜினிகாந்த் அவர்கள் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார்.

இப்பள்ளி, ஒரு வாடகை கட்டிடத்தில்தான இயங்கி வருகிறது.

இதற்கான வாடகையை சில வருடங்களாக செலுத்தவில்லை என்று கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர் அதன் உரிமையாளர்கள்.

எனவே அங்கு படித்த மாணவர்கள் ஆஸ்ரம் பள்ளியின் மற்றொரு கிளையில் படித்து வருதவாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லதா ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் பள்ளியை பூட்டி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.6 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவ-மாணவிகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு முதலில் சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோர்ட் உத்தரவுப்படி அந்த சீல் அகற்றப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்யவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Court orders landowners to unseal Latha Rajinis Ashram school

ஜோக்கர் ஹீரோவுடன் டூயட் பாடும் சாந்தினி தமிழரசன்

ஜோக்கர் ஹீரோவுடன் டூயட் பாடும் சாந்தினி தமிழரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

???????????????????????????????????????????????????????சாந்தனு பாக்யராஜ் நடித்த ‘சித்து +2’ படத்தில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன்.

இதனையடுத்து, ‘நைய்யப்புடை’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார.

தற்போது அரவிந்த் சாமியுடன் ‘வணங்காமுடி’ சிரிஷுடன் ‘ராஜா ரங்குஸ்கி’, ஆர்.கே.சுரேஷுடன் ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘ஜோக்கர்’ பட நாயகன் சோமசுந்தரம் நடித்து வரும் ஒரு படத்தல் நாயகியாக நடிக்கிறாராம்.

புதுமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடக்கிறது.

Chandini Tamilarasan teamsup with Joker fame Guru Somasundaram

ஷாலினியின் ரசிகன் நான்; அஜித் நன்றி சொன்னார்… – விவேக் ஓபராய்

ஷாலினியின் ரசிகன் நான்; அஜித் நன்றி சொன்னார்… – விவேக் ஓபராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vivek oberoiவிவேகம் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

முதலில் இவரது கேரக்டர் வில்லன் என கூறப்பட்டது. ஆனால் அஜித்தின் நண்பனாக அவர் நடித்துள்ளது பற்றி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது…
’விவேகம்’ கதையை கேட்ட பிறகு, அஜித் – சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன். ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது.

இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன்.

எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ்ப் படம்.

என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். அஜித்தை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித்.

இந்த படத்தில் நடிப்பது எனக்குதான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் ரசிகன் என்பதையும் சொன்னேன்’ என்றார்.

5 நிமிட கதை கேட்டு கன்னட சினிமாவில் நடிக்கும் ஆர்யா

5 நிமிட கதை கேட்டு கன்னட சினிமாவில் நடிக்கும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor aryaஅனூப் இயக்கும் ’ராஜரதா’ என்ற கன்னட படத்தில் நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இதில் நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி நடிகர் நிரூப் கூறும்போது…

’நான் இயக்கிய ’ரங்கி தாரங்கா’ படத்தை பார்த்துவிட்டு ஆர்யா ஏற்கனவே என்னை பாராட்டியிருந்தார்.

அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் நடிக்க கேட்டேன். போனில் 5 நிமிடம் மட்டுமே கதை சொன்னேன். உடனே நடிக்க சம்மதித்தார்’ என்றார்.

இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது…

‘இப்படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறேன்.

தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். சனிக்கிழமை இதன் சூட்டிங்கில் கலந்துகொள்கிறேன்’ என்றார்.

இதுவரை பார்க்காத விஜய் என் படத்தில் இருப்பார்… ஏஆர். முருகதாஸ்

இதுவரை பார்க்காத விஜய் என் படத்தில் இருப்பார்… ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and AR Murugadoss ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிட இருக்கிறார் இயக்குனர் ஏஆர். முருகதாஸ்.

வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் முருகதாஸ்.

அதுபற்றி அவர் கூறியதாவது…

‘துப்பாக்கி படத்திற்காக விஜய்யுடன் இணையும் போது ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் இயக்குகிறேன் என்ற பயம் இருந்தது.

அதன்பின்னர் ’கத்தி’ படம் பண்ணும்போது நீடித்தது.

எனவே புதிய படத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற பயம் அழுத்தம் இருக்கிறது.

இது கொஞ்சம் சவாலானதுதான்.

ஆனால் இதுவரை பார்க்காத விஜய்யை காண்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என்றார்.

More Articles
Follows