தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய பார்த்திபன், ‘ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் ஒண்ணு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது.
ஆனா விஜய்யும், அவரது ரசிகர்களும் சேர்ந்தால் அது மாஸ். பின்னர் விஜய் ஒரு மிகச்சிறந்த CM என்றார்.
பின்பு அவரது ஸ்டைலில் CM-ன்னா கலெக்ஷன் மன்னன்” என்றார்.
இதனையடுத்து பார்த்திபன் பேச்சுக்கு பல்வேறு ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
முக்கியமாக அஜித் ரசிகர்கள் கைதட்டுறாங்க.. அதுக்காக எப்படி வேண்டுமானலாலும் பேசலாமா? கொடுத்த காசுக்கு மேல கூவுறாரு என பார்த்திபனை கலாய்த்தனர்.
எனவே இது குறித்து பார்த்திபன் அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பதில் கருத்து ஒன்றை கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.
“காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை!
வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன்.
“வேகத்தை விட விவேகம் பெருசு-ஆனா விவேகத்தை விட அஜீத்தே பெருசு!”-நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால், சினிமாவுக்கு மட்டுமே ரசிகன்.
‘ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி’-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெர்சலான மெசேஜ்!” என்று பதிவிட்டுள்ளார்.