தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் நடிகர் சூர்யா.
மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
அவரின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதித்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா மீது எந்த அவமதிப்பு வழக்கும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சூர்யா அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூர்யா மாணவர்களை தவறாக வழி நடத்துவதாகவும், நீட் தேர்வை அரசியலாக்க முயல்வதாகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடதிதினர்.
மேலும் சூர்யாவின் படத்தை கிழித்து, செருப்பால் அடித்து, செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து செருப்பு மாலைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தர்மா என்பவர் சூர்யாவை விமர்சித்துள்ளார்.
நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பார் எனவும் பேசியிருக்கிறார்.
One lakh reward announced by hindu makkal katchi if trashing actor surya