விஜய் சேதுபதி உடன் வைகைப்புயல் இணையும் படத்தின் புதிய அப்டேட்

விஜய் சேதுபதி உடன் வைகைப்புயல் இணையும் படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகத்திற்கு வருகிறார்.

மேலும், ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி 2’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.

அதேபோல், விஜய் சேதுபதி ‘ஜவான்’, ‘காந்தி டாக்ஸ்’ உள்ளிட்ட ஹிந்தி படங்களில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு, இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் இணைகிறார் வடிவேலு.

இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படம் 2023 ஜனவரியில் தொடங்கும் என்றும், படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

new update on vijay sethupathi and vadivelu film

தளபதி 67 இல் இணையும் பிக் பாஸ் நட்சத்திரம்

தளபதி 67 இல் இணையும் பிக் பாஸ் நட்சத்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் 3’ புகழ் சாண்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்கிறார் என்று யூனிட்டுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடன இயக்குனர் சாண்டி லோகேஷுடன் ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தில் ‘ பத்தல பத்தல ‘ பாடலுக்காக பணிபுரிந்தார்.

இப்போது அவர் திரைப்பட இயக்குனர் லோகேஷின் அடுத்த படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தைப் பெற்றுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரத் – வாணிபோஜன் இணைந்த ‘மிரள்’ பட மலேசியா ரிலீஸ் அப்டேட்

பரத் – வாணிபோஜன் இணைந்த ‘மிரள்’ பட மலேசியா ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில்்M சக்திவேல் இயக்கத்தில் பரத்- வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”.

புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் SDN bhd நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது.

இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துக் கொள்கிறார்கள்.

நாயகியாக ‘லைசென்ஸ்’ பெற்றார் விஜய்டிவி புகழ் பாடகி ராஜலட்சுமி செந்தில்

நாயகியாக ‘லைசென்ஸ்’ பெற்றார் விஜய்டிவி புகழ் பாடகி ராஜலட்சுமி செந்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து தயாரிக்கும் படம்
” லைசென்ஸ்”.

தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் இந்த லைசென்ஸ் படம் மூலம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

விஜய் டிவியில் இவரது நிகழ்ச்சிகள் பாப்புலர் ஆனது.

தற்போது பட்டி முதல் சிட்டி வரை பாப்புலராக வலம்வரும் ராஜலட்சுமி செந்தில் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக சார்லி சாப்ளின் 2 படத்தில் ”என்ன மச்சான்” மற்றும் புஷ்பா படத்தில்
“வாய்யா சாமி… வா சாமீ” ஆகிய பாடல்களை சொல்லலாம்.

தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன்.

இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார்.

மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது..

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

மம்முட்டி & ஜோதிகா நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படப்பிடிப்பில் சூர்யா

மம்முட்டி & ஜோதிகா நடிக்கும் ‘காதல் – தி கோர்’ படப்பிடிப்பில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜியோ பேபி இயக்கத்தில் நடிகர் மம்முட்டியும் ஜோதிகாவும் இணைந்து ‘காதல் – தி கோர்’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார்கள்.

நடிகர்கள் லாலு அலெக்ஸ், முத்துமணி மற்றும் சின்னு சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கியது. தற்போது படக்குழு எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பிற்கு சென்று படக்குழுவினரை சந்தித்தார்.

மேலும், இப்படத்தின் போஸ்டரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya on the sets of ‘Kaathal – The Core’

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அப்டேட்…

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் நெல்சன்.

இப்படம் ஆக்‌ஷன் நிறைந்ததாகவும், தனது முந்தைய படங்களை விட மிக விறுவிறுப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இப்படத்தின் 50% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ளதாகவும்.

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படத்தை 2023 கோடையில் வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

Rajinikanth’s ‘Jailer’ movie Shooting update

More Articles
Follows