தகுதியில்லாதவர்கள் ரஜினியை விமர்சிக்கலாமா..? நட்ராஜின் நச் கேள்விகள்

தகுதியில்லாதவர்கள் ரஜினியை விமர்சிக்கலாமா..? நட்ராஜின் நச் கேள்விகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and nattyரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில் பலரும் பல்வேறு விமர்சனங்களை அவர் மீது விசி வருகின்றனர்.

அதற்கு எல்லாம் சில மேடைகளில் பேசும்போது பதிலடி கொடுத்து வருகீறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ஒரு தனியார் டிவி பேட்டியில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியுள்ள பிரபல இயக்குனர் ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகரும் நட்டி என்ற நட்ராஜ் ரஜினியை விமர்சித்தவருக்கு தக்க பதிலடிகளை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதோ அந்த ட்வீட்டுக்கள்…

1) தன்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் அரவணைத்தது..அதுவே ஒரு துவக்கம்…தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரைஅரங்கங்கள், அனுபவித்த வெற்றிகள் எண்ணிலடங்காதவை… இதை விட எத்துனையோ குழந்தைகளின் படிப்புக்கு உதவியவை..கிடைத்ததை அனைவருடன் பகிர்ந்தது..அது போதும்….

2) ஒரு படங்கூட ஓடாத… தன் தயாரிப்பாளர்களை கடன்காரன் ஆக்கிய கேடு கெட்டவன்லாம் பேசுவானாம்… யார் என்ன பண்ணனும்னு…இதில் இவன் ரசிகனாமா?…எப்படி தொங்கினாலும் வவ்வாலாக முடியாதுடீ..வர போக வண்டி குடுத்தாங்கல்ல…போ…

3) கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க… எத்தனை பேருக்கு பீஸ் கட்டி இருக்க… எத்தன பேருக்கு சாப்பாடு போடறே.. பதக்குனு அத சொல்லு…நல்லவன் பேர் சொன்ன பதக்குங்குதா?… ஏன் ஆகாது… இயற்கை தானே…..

சினிமா ஸ்டிரைக் தொடரும்; முதல்வரை சந்திக்க திரையுலகினர் திட்டம்

சினிமா ஸ்டிரைக் தொடரும்; முதல்வரை சந்திக்க திரையுலகினர் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 4th April Cine Celebrities plans to meet TN Chief Minister till now strike continuesதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷால், பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி. ஸ்ரீ ராம், இயக்குநர் சங்க தலைவர்

விக்ரமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியது :-

பொதுமக்கள் திறைஅரங்கிற்க்கு வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும்.

விவசாயகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுபடங்கள் ரீலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அடுத்த வாரம் புதன் கிழமை பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம்.

வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும்,ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும் என்றார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.

பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி பேசியது :-

திரை அரங்குகளில் கம்ப்யுட்டர் டிக்கெட்களை கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பனம் வாங்குவதால் தான் படம் பார்க்க திரை அரங்குகளை மக்கள் வருவதில்லை.

அரசு இதை ஒரு வாரியமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவே வரும் புதன் கிழமை மனு கொடுக்க அனுமதி கேட்டுள்ளோம் கிடைத்தால் அனைவரும் ஒன்றாக பேரணியாக சென்று முதலவர் மற்றும் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி

சென்னை ஜெமினி அருகே உள்ள பிலிம் சேம்பர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேட்டி..

1.எங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாததால் புதிய திரைப்படங்களை வெளியிட போவதில்லை என்ற நிலை தொடரும்.

2. தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

3.முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

4.இதற்காக அடுத்த புதன்கிழமை (ஏப்ரல் 4, 2018) பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க திட்டம்.

On 4th April Cine Celebrities plans to meet TN Chief Minister till now strike continues

ஐ ப்ரோ அழகி ப்ரியாவாரியரை பின்னுக்கு தள்ளுவாரா இவர்? (வீடியோ)

ஐ ப்ரோ அழகி ப்ரியாவாரியரை பின்னுக்கு தள்ளுவாரா இவர்? (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will this new girl break the record of Priya prakash warriorஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவே என்ற பாடலின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்த பாடலில் அவர் தன் புருவத்தை உயர்த்தி கண் அடித்து பல இளைஞர்களை தன் வலையில் வீழ்த்தினார்.

எனவே அவரது வலைத்தள பக்கங்கள் பாலோயர்களால் நிரம்ப ஆரம்பித்தன.

எனவே அவரைப் போன்று அவரது ரசிகர்களும் இளைஞீகளும் முயற்சி செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பெண், ஒரு பின்னணி இசை ஒலிக்க, தன் புருவத்தை பல விதங்களில் உயர்த்தியும் கண் அடித்தும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணைங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.

இவர் பிரியா வாரியரின் சாதனைகளை முறியடிப்பாரா? என்று காத்திருந்து பார்ப்போம்.

Will this new girl break the record of Priya prakash warrior

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்யனும்…: கமல்

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்யனும்…: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ADMK Govt must resign for Cauvery Management Board issue says Kamalகாவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக மும்பை செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு என்று கூறினார்.

மேலும் காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக எம்.பிக்கள் தியாகம் செய்ய வேண்டும்.

மேலும் அந்த தியாகம் தமிழக அரசில் இருந்து தொடங்க வேண்டும்” எனவும் கமல் பேசினார்.

ADMK Govt must resign for Cauvery Management Board issue says Kamal

சீனுராமசாமி கொடுத்த மக்கள் அன்பன் பட்டத்தை மறுத்தார் உதயநிதி

சீனுராமசாமி கொடுத்த மக்கள் அன்பன் பட்டத்தை மறுத்தார் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi refuses Makkal Anban title given by Seenu Ramasamyஉதயநிதி மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

மதுரை மற்றும் வாடிப்பட்டி பகுதியின் வாழ்க்கை முறைகளை பின்னணியாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில், என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத் தோன்றியது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “உங்கள் அன்புக்கு நன்றி சார். அந்த அளவிற்குத் தகுதி எனக்கு இப்பொழுது இருப்பதாக நான் நம்பவில்லை. படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார் சீனு ராமசாமி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த பட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என விஜய்சேதுபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi refuses Makkal Anban title given by Seenu Ramasamy

ரஜினிக்கும் சல்மான்கானுக்கும் இருக்கும் ஒற்றுமைகள்…: பிரபுதேவா

ரஜினிக்கும் சல்மான்கானுக்கும் இருக்கும் ஒற்றுமைகள்…: பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini salman khanநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த பிரபுதேவா தற்போது தயாரிப்பாளராகவும் பிஸியாகிவிட்டார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இவர் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது ‘தபாங்3’ படத்திற்காக மீண்டும் சல்மான்கானை இயக்கவிருக்கிறார்.

மீண்டும சல்மான்கானுடன் பணியாற்றுவது குறித்து அவர் பேசியதாவது..

முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேச ஆரம்பித்தோம். இப்போது நல்ல நண்பர்களாக ஆகிவிட்டோம்.

அவரைப் போன்று திரை உலகில் உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது.
அவர் அன்பானவர். கடின உழைப்பாளி. பல வி‌ஷயங்களில் ரஜினி சார் போன்றவர்.

அவர்கள் இருவருக்கும் தனி தனி ஸ்டைல் உள்ளது. யாரையும் கவர வேண்டும் என முயற்சிக்கமாட்டார்.

ஆனால் பார்ப்பவர்களுக்கு பிடித்து போகும்.” என்று பேசினார்.

Rajini and Salman Khan have same characters says Prabu Deva.jpg

More Articles
Follows