தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு நடிகரின் படங்களை மட்டுமே ரசிகன் விரும்புவதில்லை.
அதை மீறி நடிகரின் நல்லொழுக்கம், உண்மை, உழைப்பு, எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றையும் நேசிப்பான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகளவில் மதிப்பு இருக்க இவைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
அதுபோல் ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் ரஜினிகாந்த்.
இவர் தனது ராகவேந்திரா மண்டபத்தில், தன்னுடைய குருவின் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
அதில்…
“பல பிறவிகளை எடுத்த பின்னரே நாம் மனிதப்பிறவியை அடைந்துள்ளோம்.
இது ஒரு அபூர்வமான பிறப்பு.
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? கடவுள் யார்? நம்முடைய ஆத்மா யார்? என்ற கேள்விகள் நம்மில் எழுவது கடினம்.
ஆனால் அந்த கேள்விகள் வந்தபின்னர் அதற்கான விடை தருபவர்தான் குரு.
குரு வந்த பின்னர் அவரின் அருள் கிடைப்பது அபூர்வம். அதை விட அவரின் போதனைகள் கிடைப்பது அரிது.
இவையனைத்தும் கிடைத்தும் அவன் நிராகரித்தால் அவன் பைத்தியக்காரன்.
எனது முதல் குரு என் அண்ணன் சத்தியநாராயணன்.
நான் ஆன்மிகத்தில் ஈடுபட அவர்தான் காரணம்.
ராமகிருஷ்ணா பரமஹம்சர் என்னுடைய 2வது குரு.
ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன்.
ராகவேந்திரா ஆசிரமத்தில் பக்தியை கற்றுக்கொண்டேன்.
அதன்பின்னர் ரமண மகரிஷியிடம் நான் யார் என்று கேள்வி எழுப்புவதை கற்றுக்கொண்டேன்.
மேலும் தயானந்த சரஸ்வதியிடம் சமூக பிரச்சனைகளை தெரிந்துகொண்டேன்.
வேதத்தில் உள்ள சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டேன். சச்சிதானந்தர்தான் எனக்கு உபதேசம் செய்தவர்.” என்று பேசினார் ரஜினிகாந்த்.