ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கை தட்டி தூக்கிய ஹேக்கர்கள்

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கை தட்டி தூக்கிய ஹேக்கர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல கோலிவுட் நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இருப்பினும், தொழில்நுட்ப ஆதரவு குழுக்களின் உதவியுடன் அவை மீட்டமைக்கப்படுகின்றன. இப்போது, ​​இந்த பட்டியலில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் 10ம் தேதி ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு பெயர் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவரது பக்கத்தின் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் பக்கம் இன்று காலை வெற்றிகரமாக மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Harris Jayaraj’s Twitter account gets hacked

இந்திய கிரிக்கெட் வீரரின் 21 ஆண்டுகால கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்

இந்திய கிரிக்கெட் வீரரின் 21 ஆண்டுகால கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமைக்கு பெயர் பெற்ற சஞ்சு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தலைவரை சந்தித்தார். பின் தன் ட்விட்டரில் , “ஏழாவது வயதில் ரஜினி ரசிகன் நான் என பெற்றோரிடம் சொன்னேன் .. ஒரு நாள் நான் ரஜினி சாரை அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பேன் என கூறினேன் . 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாள் வந்துவிட்டது என நெகிழ்ச்சியாக பதிவிட்டார்.

Sensational Indian cricketer’s 21 year old dream of meeting Superstar Rajinikanth comes true

யார் சூப்பர் ஸ்டார்.? ஸ்ரேயா பதிலால் உஷாரான உபேந்திரா.; ‘கப்ஜா’ விழா சுவராஸ்யம்

யார் சூப்பர் ஸ்டார்.? ஸ்ரேயா பதிலால் உஷாரான உபேந்திரா.; ‘கப்ஜா’ விழா சுவராஸ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”.

உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.

“கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது

நடிகை ஸ்ரேயா சரண் கூறியதாவது….

” சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி. உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி ”

நடிகர் உபேந்திரா கூறியதாவது..,

“இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.

இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது.

இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். ” என்றார்.

இதன்பின்னர் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ஸ்ரேயா மற்றும் உபேந்திரா இருவரும் பதில் அளித்தனர்.. அப்போது ரஜினி மற்றும் உபேந்திரா பற்றி கேள்வியை ஸ்ரேயாவிடம் கேட்டனர்.

அப்போது ரஜினி சூப்பர் ஸ்டார்.. உபேந்திரா ரியல் ஸ்டார் என்றார். அப்படி என்றால் இவர் மட்டும் தான் ரியல் ஸ்டார் என்ற சலசலப்பு ஏற்பட்டது.

இதனை புரிந்து கொண்ட உபேந்திரா.. “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான்” என அந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகர்கள்

உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண்

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம் – Sri Siddeshwara Enterprises & Invenio Origin
தயாரிப்பு – R.சந்துரு
இணை தயாரிப்பு – அலங்கார் பாண்டியன்
இயக்கம் – R.சந்துரு
ஒளிப்பதிவு – A. J. ஷெட்டி
எடிட்டிங் – தீபு S. குமார்
இசை – ரவி பஸ்ருர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Who is the superstar? Upendra alerted by Shreya’s reply.; ‘Kabzaa’ festival is interesting

BREAKING அவதார் 2 படத்துக்கு ஆஸ்கர்.; விருது பெற்ற மற்ற படங்கள் விவரம் இதோ..

BREAKING அவதார் 2 படத்துக்கு ஆஸ்கர்.; விருது பெற்ற மற்ற படங்கள் விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்கினர்.

விருதுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என திரைப்பட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர்.

இந்த நிலையில் ‘அவதார் 2′ திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது.. இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது.

மேலும் விருதுகள் பற்றிய விவரம்..

சிறந்த சர்வதேச படமாக ஜெர்மனியின் All Quiet on the Western Front தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த ஒப்பனைக்கான விருதை “The Whale” படம் வென்றது. இந்த படத்தில் ஆட்ரியன் மோட்ரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் மேக் அப் மற்றும் சிகை அலங்காரம் கலைஞர்களாக பணியாற்றினர்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’திரைப்படம் தட்டிச் சென்றது.

’Everything All At Once’ படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்.

சிறந்த ஆவணப்படமாக Navalny தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறந்த ஆவணப்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படமான‘All That Breathes’-க்கு விருது கிடைக்கவில்லை.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “An Irish Goodbye” வென்றது..

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை ‘The Whale’ படம் வென்றது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த “ALL QUIET ON THE WESTER FRONT”

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ரூத் கார்டர்

“BLACK PANTHER: WAKANDA FOREVER” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை All Quiet on the Western Front வென்றது.

Avatar 2 wins best visual effects at oscar

BREAKING தமிழக கதைக்களத்தில் கார்த்தி இயக்கிய The Elephant Whisperers படத்துக்கு ஆஸ்கர் விருது

BREAKING தமிழக கதைக்களத்தில் கார்த்தி இயக்கிய The Elephant Whisperers படத்துக்கு ஆஸ்கர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்கினர்.

சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.

நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திகு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.

இதன் மூலம் இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.

மேலும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் தமிழகத்தின் பெருமையும் இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது.

The Elephant Whisperers wins the Oscar for Best Documentary Short Film

Congrats #Oscars95

BIG BREAKING ராஜமௌலி இயக்கிய RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது

BIG BREAKING ராஜமௌலி இயக்கிய RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்கினர்.

சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’.

இந்த நிலையில் இந்திய சினிமாவிற்கு மற்றொரு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது..

ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு என்ற பாடல் இடம் பெற்றது.

இந்தப் பாடலுக்கு கீரவாணி என்பவர் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலுக்கு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் போட்ட ஆட்டம் இன்று வரை ரசிகர்களை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கூடுதல் தகவல்…

இந்தப் பாடலுக்கு விருது அறிவிக்கப்படும் முன்னரே.. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Naatu naatu wins oscar 2023

More Articles
Follows