தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள்… அது போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்.
ஆனால் அரிதாக ஒரு சில படங்களுக்கு மட்டுமே ரசிகர் இருப்பார்கள். எனவேதான் அந்தப் படத்தின் தொடர்ச்சி பாகங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கும்.
அந்த வரிசையில் மலையாளத்தில் சிபிஐ டைரி குறிப்பு மற்றும் த்ரிஷ்யம் ஆகிய படங்களை சேர்க்கலாம்.
கடந்த 2015ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இதில் ஜார்ஜ் குட்டி என்ற கேரக்டர் பெயரில் மோகன்லால் நடித்திருந்தார்.
இப்படம் சூப்பர் ஹிட் ஆகவே தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றிகளைப் பெற்றது.
எனவே ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தப் படமும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து த்ரிஷ்யம் 3 பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக அப்பட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால் கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி இஸ் பேக் என இப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.