தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் மற்றும் (வேந்தர்) ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் ‘மாற்றத்திற்கான கூட்டணி’யை அமைத்தனர்.
சமீபத்தில் இவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி இன்று மார்ச் 3ல் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியதாவது:
“சமக (நாம்) ஓரிரு தொகுதிகளில் நிற்க மாட்டோம், தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றோம்.
அப்படி சொன்ன பிறகும் நமக்கு அழைப்பு விடுக்கவில்லையென்றால், அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்றே அர்த்தம்.
பிப். 20-க்குள் 147 விருப்ப மனுக்களை சமக பெற்றிருக்கிறது.
நமது வாக்கு % என்ன என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த முடிவு. நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
துளியும் மரியாதை இல்லாதவர்களாகத்தான் இந்த ஆட்சியாளர்களை நான் பார்க்கிறேன். ஒரு தொகுதி கொடுத்து பிரச்சாரத்துக்குப் போக சொன்னால் போய்விடுவோம் என்ற மமதையில் அவர்கள் உள்ளனர்.
கமலை நேரில் சந்தித்துக் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அதன்படி முதல்வர் வேட்பாளர் கமல்தான். விட்டுக்கொடுத்தால் தான் வெற்றி வந்து சேரும்.
இந்திராகாந்தியையும், லால் பகதூர் சாஸ்திரியையும் பிரதமராக்கி அழகு பார்த்தவர் காமராஜர். நான் இரண்டாம் காமராஜராக இருக்கிறேன்.”
என சரத்குமார் பேசினார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது…
“மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)
மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும். (2/2)..
MNM and AISMK alliance confirmed for upcoming Assembly elections in TamilNadu.