காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..; குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..; குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rahul gandhi mk stalin (2)காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

ராகுல் காந்திக்கு தற்போது வயது 50் ஆகிறது.

இதுபற்றி அவரின் டுவிட்டரில்…

“கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன்.

அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

MK Stalin wishes Rahul Gandhi a speedy recovery

நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரம் விவேக்.. பொது வாழ்விலிருந்து விலகும் முடிவை தடுத்தார்.. – தமிழருவி மணியன் இரங்கல்

நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரம் விவேக்.. பொது வாழ்விலிருந்து விலகும் முடிவை தடுத்தார்.. – தமிழருவி மணியன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்.

இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஓராண்டுக்கு முன்பு முன்னணி இதழில் விவேக் வழங்கிய நேர்காணலில், நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை.

‘தமிழருவி மணியன் என்ற நேர்மையாளருக்கு என்ன அங்கீகாரத்தை இவர்கள் தந்து எந்தப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர்?’ என்று கேட்டிருந்ததைக் கண்டு நான் வியந்தேன்.

அவருக்கும் எனக்கும் அன்றுவரை நேரடித் தொடர்பு இருந்ததில்லை. நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன்.

ஒருநாள் சாலிகிராமத்திலுள்ள விவேக் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மனம் நெகிழ்ந்து வாசலில் வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனிதநேயமும், சமூக நலனில் அவருக்கு இருக்கும் உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலரவேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் எனக்கு வியப்பை ஏற்படுத்தின.

சந்திப்பின் முடிவில், அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார்.

‘அன்பைத்தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை’ என்று மறுத்துவிட்டேன்.

பொய்த்தனமும் போலியும் மலிந்த அரசியலிலிருந்து முற்றிலும் நான் விலகுவதாக அறிவித்த அறிக்கையை வாசித்த விவேக் “ஒரு பேனாவைக்கூட பெற மறுக்கும் ஒருவர் பொது வாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்” என்று ட்வீட் செய்து தொலைப்பேசியிலும் என்னை அழைத்து ‘விலக வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

என்னுடைய ‘வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்’ நூலைக் கடந்த ஆண்டு கொரோனா சூழலில் வாசித்துக் கொண்டிருப்பதாகப் பதிவிட்டதோடு தொலைப்பேசியிலும் அழைத்துப் பேசிய விவேக், ‘கொரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவுடன் நாம் அவசியம் சந்திக்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்’ என்றார்.

ஆனால், கருணையற்றக் காலம் நொடிப்பொழுதில் அந்த அற்புதமான கலைஞனை, நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசித்த இனிய பண்புகள் கொண்டவனை, மனித நேயம் மிக்கவனை, சிரிக்கவைத்து சிந்தனையைத் தூண்டியவனை, நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாகத் துலங்கியவர் விவேக்”

என்று உருக்கமாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian condolence message to Actor Vivek

vivek Tamilaruvi manian

‘ஷீரோ’ என்ற மலையாள த்ரில்லர் படத்தில் சன்னி லியோன்

‘ஷீரோ’ என்ற மலையாள த்ரில்லர் படத்தில் சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leone shero (2)உலக சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்தவர் நடிகை சன்னி லியோன்.

இவர் ஒரு முறை கேரளா வந்த போது பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு கூட்டம் கூடியது.

ஓரிரு மலையாள படங்களிலேயே இதை கிண்டலடித்து வசனங்கள் வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி.

மலையாளத்தில் மம்மூட்டி உடன் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி லியோன்.

மேலும் ‘ரங்கீலா’ மலையாளப் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், Shero (ஷீரோ) என்ற சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார் சன்னி.

இந்த படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார்.

இந்த படம் மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்குக்காக கேரளா வந்திருக்கும் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமில் பியூட்டி ஆஃப் கேரளா என (இயற்கை பின்னணி) தன் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Actress Sunny leone to play lead role in malayalam thriller movie Shero

இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்த தமிழ்நாடு..!

இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்த தமிழ்நாடு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid Vaccine (2)உலகமெங்கும் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பே களப்பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் மற்றும் 8, 82,130 கோவாக்சின் வந்துள்ளன.

ஆக மொத்தம் 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.

தற்போது வரை 48 லட்சத்து 7 ஆயிரத்து 148 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
கையிருப்பு 4.1 லட்சம் உள்ளது.

அதன்படி சுமார் 3 லட்சம் தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளதாம்.

கொரோனா தடுப்பூசிகள் 10 டோஸ் அல்லது 20 டோஸ் என்று ஒரு குப்பியில் (பாட்டில்) வரும்.

ஒரு பாட்டிலை திறந்த பிறகு 4 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஒருவேளை பாட்டிலை திறந்த அன்று தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை எடுத்து வைக்க கூடாது.

எடுத்து வைத்தாலும் அவற்றை அடுத்த நாள் உபயோகிக்க முடியாது.

இவ்வாறாக தமிழ்நாட்டில் 12.1% சதவீத தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளன.

44 lakh vaccine doses wasted; TN tops list with 12.19%

ரஜினி மம்மூட்டி மோகன் லாலுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் நயன்தாரா சக்ரவர்த்தி

ரஜினி மம்மூட்டி மோகன் லாலுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் நயன்தாரா சக்ரவர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Chakravarthi (2)மலையாளத்தில் ‘ கிலுக்கம் கிலுகிலுக்கம் ‘ படத்தின் மூலம் அறிமுகமானவர் *’ பேபி ‘ நயன்தாரா*.

மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார்.

ரஜினியின் ‘குசேலன்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தார் ‘பேபி’ நயன்தாரா.

அப்போது முதல் நாள் என்னை பார்த்த நயன்தாரா சேச்சி என்னிடம்.. *” நீ தான் என் பெயரை திருடியவளா ” என்று தமாஷாக கேட்டார்.

அதற்கு பேபி நயன்தாரா, நீங்கள் தான் என் பெயரை வைத்துள்ளீர்கள்.

நான் பிறக்கும் போதே நயன்தாராவாக தான் பிறந்தேன் வேண்டுமென்றால் என் பிறப்பு சான்றிதழ்/ birth certificate காட்டவா ? என்று நான் சிறுபிள்ளை தனமாக பதில் சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம் நயன்தாரா.

ரஹ்மான் நாயகனாக நடித்த மலையாள படம் ‘மறுபடி’ தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடைசி படம்.

அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்ற தன்னை தயார் படுத்தியுள்ளார்.

‘பேபி’ நயன்தாரா வாக அல்ல..ஹீரோயின் ‘மிஸ்’நயன்தாரா சக்ரவர்த்தியாக இனி வலம் வர உள்ளார்.

இதை அவரே தனது பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 20) அறிவித்துள்ளார்.

எர்ணாகுளம் தேவராவிலுள்ள புனித இருதய கல்லூரி (Sacred Heart College)யில் மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம் (Mass communication and Journalism) முதலாமாண்டு மாணவியாக சேர்ந்துள்ள நயன்தாரா சக்ரவர்த்திக்கு தமிழில் நாயகியாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை.

அதனாலேயே தமிழில் கதை கேட்டு வருகிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா இந்த ‘மலையாள சுந்தரி’யையும் அரவணைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Nayanthara Chakravarthy is all set to ready to act as heroine

விவேக் விட்டுச் சென்ற பசுமை புரட்சியை கையில் எடுக்கும் ஆத்மிகா

விவேக் விட்டுச் சென்ற பசுமை புரட்சியை கையில் எடுக்கும் ஆத்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதி & விவேக் நடிப்பில் உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஆத்மிகா.

தற்போது கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.

இவர் இன்று தனது ட்விட்டரில்…

“நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.

என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.

அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.

– நடிகை ஆத்மிகா”

இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆத்மிகா.

Actress Aathmika plants saplings in rememberance of actor Vivek

More Articles
Follows