நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன் – மீரா மிதுன்

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன் – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உடபட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டார். பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. இன்று அந்த போட்டி நடைபெறமால் தடுக்கப்பட்டிருக்கிறது.
அதைப்பற்றிய செய்தியாளர் சந்திப்பில்
மீரா மிதுன் கூறியதாவது

ஒரு அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில் ஒருங்கினைப்பாளர் நேற்று போன் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அவரை சந்திக்க நேரில சென்றேன்
இன்று நிகழ்ச்சியை நடத்தகூடாது என்று இரண்டு போலிஸ் அதிகாரிகளை கூட்டி வந்து என்னை பயமுறுத்தினார்.

நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன். என்னை முன்பு மிரட்டிய அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோருடன் நிகழ்ச்சி ஒருங்க்கினைப்பாளர் இணைந்து கொண்டு இன்று நிகழ்ச்சியை நடத்த விடாமல க்ரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிரட்டப்பட்டேன்.

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன்.

தமிழ்ப்பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன். அதை இன்று நடத்த விடாமல் முறியடித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். இன்றே இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று சின்ன சின்ன ஹோட்டலில் போய் நடத்த முற்பட்டேன். ஆனால் இந்த இறுதிப் போட்டியாளர்களின் கனவு, இந்த விழா மிகப்பெரியதாக இருக்கும் என்பது தான். அதை உடைக்க நினைக்கவில்லை. இந்த விழாவை கண்டிப்பாக மிகப்பெரிய விழாவாக நடத்துவேன். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்பட்டி அனைத்தும் எனக்கு சாதகமாக இருந்தும் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்ப்பெண்ணாக நான் ஓய்ந்து போக மாட்டேன். கண்டிப்பாக ஜெயித்து காட்டுவேன் என்றார்.

மேலும் பேசிய பதினாலு தமிழ் போட்டியாளர்களும் தங்கள் கனவுகளையும், மீராமிதுன் தங்களுக்கு தந்த ஆதரவையும் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். முழுக்க முழுக்க தமிழிலிலேயே அழகிகள் அனைவரும் பேசிய மேடையாக இது இருந்தது எல்லைரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக
அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில் ரவ்னக் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.

என் பாட்ட கேட்டுதானே வாழ்றீங்க..; இளையராஜாவின் ஆணவ பேச்சு

என் பாட்ட கேட்டுதானே வாழ்றீங்க..; இளையராஜாவின் ஆணவ பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Director Ilayaraaj controversy speech again in his Concert தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நேற்று நள்ளிரவை நடத்தினார் இளையராஜா.

6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 8 மணிக்கே தொடங்கியது.

நிகழ்ச்சி அரங்கில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பலரும் தொந்தரவுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் ஒருவர் மேடை அருகே வந்து ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து சென்றார். அவரை பார்த்த இளையராஜா பாடலை நிறுத்தி விட்டு அவரை கூப்பிட்டு கண்டித்தார்.

அப்போது பேசும்போது… இதுபோன்ற இடைஞ்சல்களை செய்யாதீர். நான் 5 மணி நேரம் நின்றுகொண்டு இசை கச்சேரி செய்கிறேன். என் பாட்டை கேட்டுதானே நீங்கள் வாழ்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் தானே என் பாடல்களே தானே உள்ளது என பேசினார் இளையராஜா.

இவரின் இசையில்லாமல் நாம் வாழ முடியாதா? எனவும் சிலர் விவாதிக்க ஆரம்பித்தனர். அவரின் இந்த பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

Music Director Ilayaraaj controversy speech again in his Concert

நீர் இல்ல; 2 லிட்டர் 7UP ரூ. 500; செம லேட்…. இளையராஜா விழா இம்சைகள்

நீர் இல்ல; 2 லிட்டர் 7UP ரூ. 500; செம லேட்…. இளையராஜா விழா இம்சைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraaja Concert controversy happened on his birthdayஇந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த இளையராஜாவின் 76வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு அவரின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த விழா மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்பிபி மற்றும் யேசுதாஸ் அங்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. அவர்கள் வரவே 8 மணி ஆனது. 8.30 மணி போல கமல்ஹாசன் வந்தார்.

இளையராஜா 7.45மணிக்கு விழாவை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் பொறுமை இழந்தனர்.

மேலும் விழா தொடங்கும்போதே தண்ணீர் பாட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு வகைகள் விற்பவர்கள் கூட தண்ணீர் பாட்டில் வைத்திருக்கவில்லை.

இதனால் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. 2 லிட்டர் 7அப் கூல் ட்ரிங் ரூ. 500க்கு விற்கப்பட்டது. இதனால் பலரும் கோபம் அடைந்தனர்.

தண்ணீர் இல்லை. குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது? எதையாவது வாங்க வேண்டும் என மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.

மேலும் காவல் துறையினரும் போதுமான அளவு இல்லை. ரூ. 1000 டிக்கெட் வாங்கியவர்கள் ரூ. 5000 சீட்களில் அமர்ந்தனர். இதனால் அவர்களுக்கு உட்கார சேர்கள் இல்லாமல் போனது.

மேலும் பலரும் நிற்க ஆரம்பித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது.

மேலும் நிகழ்ச்சி தொடங்கி 2 மணி நேரத்திற்கு மெலோடி மற்றும் சோக பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது. இதனால் 10 மணிக்கே நிறைய பேர் கலைந்து சென்றனர்.

ஆக.. இசையை கேட்க வந்தவர்களுக்கு இந்த இளையராஜாவின் இசை விழா இம்சை ஆனது.

Ilayaraaja Concert controversy happened on his birthday

தன்மானம் காத்த தமிழன்..; ஹிந்தியில் மீண்டும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

தன்மானம் காத்த தமிழன்..; ஹிந்தியில் மீண்டும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence is back to direct the Hindi version of Kanchana தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.

பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.

மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.

தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

Raghava Lawrence is back to direct the Hindi version of Kanchana

‘காட்டுப்பய காளி’ ஜெய்வந்த்தின் நல்ல மனசு; போலீசுக்கு கூலிங் கிளாஸ் உதவி

‘காட்டுப்பய காளி’ ஜெய்வந்த்தின் நல்ல மனசு; போலீசுக்கு கூலிங் கிளாஸ் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Actor Jaivanth sponsored Cooling Glass to Police departmentநேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது.
அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது.

நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படா வண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள்.

அத்தகைய மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு தலா ஒரு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

ஜெய்வந்த் ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ ஆகிய திரைப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது ‘அசால்ட்’ எனும் அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பினை தனக்கு ஏற்படுத்தித் தந்த காவல் துறையினருக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்தார் ஜெய்வந்த்.

Actor Jaivanth sponsored Cooling Glass to Police department

More Articles
Follows