தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.
சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.
எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா.
அதில்..
‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.
என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.
ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என கூறியுள்ளார்.
இவையில்லாமல் மேலும் அதில் மீரா பேசியதாவது…
“தமிழ் பேச தெரிந்த ஒரு தமிழ்நாட்டு பெண் வளர்ச்சி அடைவது இங்குள்ள ஆண்களுக்கு பிடிக்காது.
இங்கு மற்ற மொழி பேசும் பெண்கள் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள். காரணம் இவர்களின் ஆசைக்கு அவர்கள் இணங்குகிறார்கள்.
என் மீது எல்லோருமே ஆசைப்படுவது தான் என்னோட இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.
ஆனாலும் சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் மீராமிதுன்.
Meera Mithun said even Gandhi and Nehru has gone to jails