தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி சாமியார் நித்தியானந்தா.
இவர் எவருக்கும் தெரியாத ஏதோ ஒரு இடத்திற்கு சென்று அங்கு கைலாசா என்ற நாட்டையே உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அந்த நாட்டின் அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
மேலும் சில நாட்களாக ரிசர்வ் வங்கி ஆஃப் கைலாசா என்று வங்கியை தொடங்கி கரன்சிகளை அச்சடித்து வருகிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா குறித்து மீரா மிதுன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா பற்றி நெகட்டிவான செய்திகளே வருகிறது. ஆனால் அவர் புதிய நாட்டை ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறார். அவருடைய நாட்டிற்கு செல்ல நானும் விருப்பப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.