மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு கைமாறியது

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு கைமாறியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanam Shetty crowned as Miss South India 2016 by replacing Meera Mithun மிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.

மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது..

2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி..

தற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது.

இதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.

சனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.

https://www.facebook.com/misssouthindia/

Sanam Shetty crowned as Miss South India 2016 by replacing Meera Mithun

தண்டல்காரன் பாடல் பாடியவரின் அடுத்த அதிரடி ‘வெண்பனி இரவில்’

தண்டல்காரன் பாடல் பாடியவரின் அடுத்த அதிரடி ‘வெண்பனி இரவில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thandalkaran Song fame Ranjiths next song is Venpani Iravilசூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திற்கு பாடல் எழுதிய தமிழணங்கு தான் இந்தப்பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடலுக்கு ஜுபின் இசை அமைத்துள்ளார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஐந்து படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் உன்னத்தான் நினைக்கையிலே என்கிற பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Thandalkaran Song fame Ranjiths next song is Venpani Iravil

ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Deluxe selected for Fantasia International Film festivalசமீபத்தில் வெளியான படங்களில் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் பெருமதிப்புக்குரிய ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது.

கனடாவின் மான்ட்ரியல் நகரில் எதிர்வரும் ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரையில் நடைபெறும் இவ்விழா, ‘வட அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் பன்முகப்பட்ட வகையான திரைப்படங்களை திரையிடும் பெரு விழா’ என சிறப்பு பெயர் பெற்றது.

இத்திரைப்பட விழாவில் லியம் ஹெம்ஸ்வர்த்தின் ‘கில்லர்மேன்’ மற்றும் ரிச்சர்ட் ட்ரேஃபஸ்ஸின் ‘பாய்க்நன்ட் அஸ்ரோநாட்’ ஆகிய திரைப்படங்களும் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Super Deluxe selected for Fantasia International Film festival

இளையராஜா & எஸ்.பி.பி-யை மீண்டும் இணைத்த ‘தமிழரசன்’

இளையராஜா & எஸ்.பி.பி-யை மீண்டும் இணைத்த ‘தமிழரசன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBalaSubramaniyam sings once again for Ilayaraja in Tamilarasanஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “தமிழரசன்”.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா,
ஸ்ரீஜா, கே.ஆர். செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
இசை – இளையராஜா
பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு – கெளசல்யா ராணி

சில அதிசயங்கள் கலையால் மட்டும் தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது.

விஜய் ஆண்டனி நடித்து வரும் இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்த படத்திற்கு ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜா இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார்.

சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.

இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெல்டிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில் பழனிபாரதி எழுதியிருக்கும் “ வா வா என் மகனே “ என்னும் இந்த தாலாட்டு பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

SPBalaSubramaniyam sings once again for Ilayaraja in Tamilarasan

சாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்!

சாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு தொழிலில் முறைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டியுள்ளது. முதலில், இசையமைப்பாளர்கள் மூவரும் ‘சாஹோ’ தயாரிப்பாளர்களுக்கு படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தனர். அதன் பிறகு, தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்களை வாழ்த்தியதோடு, அவர்கள் படத்தில் இருந்து வெளியேறிய செய்தியை அறிவித்தனர்.

தயாரிப்பாளர்கள், UV Creations தங்கள் ட்விட்டரில், “ஷங்கர் இஷான் லாய் உங்கள் ஆதரவுக்கு நன்றி, பணியாற்றுவதற்கு சிறந்த மனிதர்கள். உங்களுடன் விரைவில் பணிபுரிவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
#Saaho ” என்று பதிவிட்டனர்.

தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்ற இசையை இந்த படத்தின் மூலம் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அது பற்றிய விவரங்களை கூடிய விரைவில் அறிவிப்பார்கள்.

சாஹோ இந்தியாவில் மிகப்பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகி, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபாஸ் நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கும் இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

‘சாஹோ’ தயாரிப்பாளர்கள் பிரபாஸ் தோன்றும் போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில் பிரபாஸ் மிகவும் சீரியஸான ஒரு தோற்றத்தில் இருந்தார். மேலும் இந்த பிரமாண்ட படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளி ஷர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

UV கிரியேஷன்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த பிரமாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படத்தை சுஜீ byத் இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 15, 2019ல் உலகமெங்க வெளியாகிறது சாஹோ.

உலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்

உலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல விஷயங்கள் அப்படியே புதைக்கப்பட முடியாது என்பதை காலம் மற்றும் அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. இது தான் அத்தகைய பிரமுகர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவர்களை சந்திக்கும் ஒரு பயணத்தில் இறங்கியிருக்கிறார்.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது உண்மையே. என் சார்பாக நான் ஏதாவது செய்ய விரும்பினேன், இது என் சார்பில் ஒரு சிறிய முயற்சி” என்றார்.

ஜி.வி.பிரகாஷ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் சிலரை சந்தித்து, உரையாடுகிறார். அவர் சந்திக்கும் பிரமுகர்கள் அவர்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கோ அல்லது பல எல்லையையும் தாண்டி மிகப்பெரிய உதவி மற்றும் பங்களிப்புக்கு செய்பவர்களாக இருப்பார்கள். ஜி.வி.பிரகாஷின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் ஒளிபரப்பாகும் “மகாத்மா மனிதர்கள்” என்ற இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்.

More Articles
Follows