தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை மாடல் என பெயர் பெற்றவர் மீரா மிதுன்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அண்மையில் தலித் சாதியினரை SC இனத்தவர்களை விமர்ச்சித்துள்ளார்.
மீரா மிதுன் பேசியதாவது…
“பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.
திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.
இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
மேலும் மீராவை கைது செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
இதனால் மீரா மிதுன் மீது சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர் விரைவில் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் அவர்கள் மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில்…
என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு..
உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல.
வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.
சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?
சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?
பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா?
ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது?
விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?
“குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்” என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.
மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம்.
இத்தகைய பேட்டிகளை யூட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம்.
மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன்.
இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
– அன்பன் எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
Actor MS Bhaskar slams Meera mithun’s contoversial speech