தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாமியார் நித்தியானந்தா… இவரைச் சுற்றி் நித்தமும் இளம் பெண்கள் கூட்டம் இருந்தும் கொண்டே இருக்கும்.
இதனால் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
பெண்கள் பாலியல் புகார் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அண்மையில் சிக்கியவர்.
இவரை தமிழக போலீசார் தேடிக் கொண்டிருக்கும் போதே திடீரென வெளிநாடு பறந்தார்.
இந்துக்களுக்காக கைலாசா என்ற தனித் தீவையே உருவாக்கினார்.
அந்த நாட்டுக்கென தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டார்.
எனவே பலரின் கனவும் கைலாசா நாட்டு பக்கம் திரும்பியது. கொரோனா காலத்தில் அந்த நாட்டுக்கு செல்ல பலரும் விரும்பினர்.
தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியா செல்ல அந்நாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Nithya nandha ban indian people to enter Kailasa