தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காற்று வெளியிடை படத்தை அடுத்து, மணிரத்னம் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதை பார்த்தோம்.
இந்நிலையில் இப்படம் நான்கு நாயகர்களை கொண்ட கதை என்று தெரியவந்துள்ளது.
எனவே விஜய்சேதுபதியுடன் அரவிந்த்சாமி, துல்கர்சல்மான், பகத் பாசில் ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக்கவிருக்கிறார்களாம்.
இப்படத்திற்கு இசை… என்று சொன்னாலே அது ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றவிருக்கிறார்.