கார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

கார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi imagesகார்த்தி நடிக்கும் 18- வது புதிய படத்தின் படப்பிடிப்புபூஜையுடன் இன்று ஆரம்பரமானது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்றுபெயரிடப்பட்டுள்ளனர். தற்போது கார்த்தியின் நடிப்பில்உருவாகியுள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ எனஅடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நாயகன் கார்த்தியுடன் இணைந்து கைகோர்க்க வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப்பெற்ற இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன்(அஞ்சாதே) , ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம்பிரம்மாண்டமாக உருவாகிறது. படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் பிரத்யேக காட்சிகளை அமைக்கிறார்கள்.

இசை : சாம் C.S.
ஒளிப்பதிவு : சத்யன் சூர்யன்
எடிட்டிங் : ஃபிலோமின் ராஜ்
கலை : சதீஷ்குமார்
வசனம் : பொன் பார்த்திபன்

சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படம் உருவாகிறது.

ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி போன்ற மக்கள் பாராட்டைப் பெற்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’. இப்பொழுது சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே.’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.இதேபோல் ‘வண்டிச்சக்கரம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ‘விடிஞ்சா கல்யாணம், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் விவேகானந்தா பிக்சர்ஸ்.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த ‘கார்த்தி 18’ படத்தை தயாரிக்கிறது.

தயாரிப்பு : S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு & திருப்பூர் விவேக்.

“கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் – எடிட்டர் ரூபன்!

“கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் – எடிட்டர் ரூபன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaaகனா (ட்ரீம்) என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தவிர்க்க முடியாத சாரம், இந்த படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் குழுவினர் மகிழ்கிறார்கள். இயல்பாகவே ஒரு எடிட்டரின் மனதில் காட்சியின் நீளம், வேகம், எங்கு காட்சிகளை வெட்ட வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘கனா’வில் பணியாற்றிய ரூபனின் அனுபவம் வித்தியாசமானது.

சில திரைப்படங்கள் ‘எடிட்டர்கள்’ தங்கள் அடையாளத்தை மறந்து ரசிகர்களாக, அதன் ஒரு சில அம்சங்களுக்காக தொடர்ந்து பலமுறை பார்க்க வைக்கும். தனிப்பட்ட முறையில், நான் இந்த மாதிரி ஒரு சில படங்கள் எனக்கு இத்தகைய தாக்கத்தை அளித்திருக்கின்றன. குறிப்பாக, கனா திரைப்படத்தில் பணியாற்றும் போது, கட்ஸ் மற்றும் ட்ரான்சிஸன்ஸ் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை. படத்தின் எடிட்டிங்கின் போது நான் அப்படி உணர்வுகளோடு ஒரு பிணைப்பு இருந்தது. மேலும், சத்யராஜ் சார் கதாபாத்திரத்தின் மூலம் எனது தந்தையின் ஆராவை நான் உணரவும், அனுபவிக்கவும் முடிந்தது. இயல்பாகவே, தந்தைகள் எப்போதும் குழந்தைகளின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுப்பவர்கள். எல்லோருக்கும் இதேபோன்ற உணர்வை கனா நிச்சயமாக வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் எடிட்டர் ரூபன்.

படத்தின் நீளம் குறித்து அவர் கூறும்போது, “வழக்கமாக ஒரு படத்தின் நீளம் என்பது திரையில் படம் ஓடும் நேரத்தை சொல்வார்கள். ஆனால் கனா படம் முடிந்த பிறகும் கூட, உணர்ச்சிகள் மற்றும் உற்சாகத்ததுடன் வீட்டிற்கு செல்வீர்கள் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எங்களது குழுவினரை பொறுத்தவரையில், கனா எங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன், இது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு உதவும்” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அருணாஜா காமராஜ்’ இயக்குனராக அறிமுகமாகும் கனா படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. முழுமையான ஒரு ‘கிரிக்கெட்’ படமான இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, முனீஸ்காந்த் என்கிற ராமதாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மோகன்ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுத திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மற்றும் லால்குடி இளையராஜாவின் கலை அமைப்பு கவனிக்க வைத்திருக்கின்றன.

கஷ்டமர் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து

கஷ்டமர் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivanஓரிரு தினங்களுக்கு முன் கஷ்டமருக்கு உணவை கொண்டு செல்லும்போது டெலிவரி பாய் ஒருவர் வண்டியில் இருந்த படியே அந்த உணவுகளை கொஞ்சம் சாப்பிட்டார்.

அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானது.

டெலிவரி பாயின் இந்த செயலை பலரும் கண்டித்தனர்.

இது குறித்து டைரக்டர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…

’பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை, அவரை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் கூறியது எல்லோரிடமும் பாராட்டை பெற்று வருகின்றது.

ரஜினி 68 பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையுலக முதல்வர் பராக்..

ரஜினி 68 பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையுலக முதல்வர் பராக்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi is Maga Nadigan says Rajini at Petta audio launch“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்… அவர் நம்ம தலைவர் ரஜினிகாந்த்தான்.

சினிமாவுலகில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் இவர் மட்டுமே சூப்பர் ஸ்டாராக கடந்த 44 வருடங்களாக திகழ்ந்து வருகிறார்.

சாதாரண கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய இவர் இன்று புகழின் உச்சியில் அதே எளிமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவரை சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

எளிமை, நேர்மை, பொறுமை ஆகியவற்றை தங்களின் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு அவரை தெய்வமாக வழிப்படுகின்றனர்.

இன்று அவர் தன் 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினியின் தீவிர வெறியர்களுக்காக அவரை பற்றி சில குறிப்புகளை வழங்கியிருக்கிறோம்.

  • 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக பிறந்தார்.
  • இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
  • சிவாஜி ராவ் கைக்வாட்’ என்பதுதான் ரஜினியின் இயற்பெயர்.
  • தனது 5 வயதியேயே தாயை இழந்தவர் ரஜினிகாந்த். பின்னர் அண்ணன் மற்றும் அண்ணி வளர்ப்பில் வளர்ந்தார்.
  • பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” ஆகிய பள்ளிகளில் தன் படிப்பை முடித்தார்.
  • தன் நண்பர்களின் உதவியால் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொண்டார்.
  • பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக பயணத்தை தொடங்கினார். இப்படம் 1975ஆம் ஆண்டு வெளியானது.
  • மீண்டும் கே.பி. இயக்கத்தில் “மூன்று முடிச்சு” படத்தில் நடித்து தனக்கான ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டார்.
  • இப்படத்தில்தான் சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை அறிமுகப்படுத்தினார்.
  • பின்னர் தொடர்ந்து அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கத் துவங்கினார். பைரவி படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
  • தனது 100வது படத்தில் தான் விரும்பும் “ஸ்ரீராகவேந்திரா” ஸ்வாமிகளாக நடித்து காட்டினார்.
  • இவரின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் இப்படத்தையும் அடிக்கடி நினைவுப்படுத்துவார் ரஜினி.
  • ரஜினியின் படங்கள் ஒவ்வொன்றும் இவரது படங்களுக்கே போட்டியாக அமைந்தது.
  • கமர்ஷியல் படங்களில் நடிக்கத் துவங்கி தன்னை ஒரு கமர்ஷியல் கிங் ஆக மாற்றிக் காட்டினார்.
  • ‘பிளட் ஸ்டோன்’ (1988) என்ற ஆங்கில படத்திலும் நடித்து பெருமை சேர்த்தார்.
  • தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
  • தன்னை பேட்டி எடுக்க வந்த எத்திராஜ் கல்லூரி மாணவி லதாவிடம் “தன்னை மணக்க விருப்பமா?” என்று கேட்டுள்ளார். பின்னர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
  • தன் திருமணத்திற்கு எந்த ஒரு நிருபரையும் அழைக்கவில்லை. காரணம் தன் திருமணத்தை மிக எளிமையாக நடத்த விரும்புவதாக கூறினார்.
  • ஒருவேளை நாங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என ஒரு நிருபர் கேட்க… வந்தால் அடிப்பேன் என்று ரஜினி கூறினாராம்.
  • தற்போது இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.
    தற்போது இரு மகள்களுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகளும் உள்ளனர்.
  • வருடத்திற்கு பல படங்களில் நடித்து தன்னை அடையாளப்படுத்தி கொண்டாலும் 1990ஆம் ஆண்டுகளில் வெளியான படங்கள் ரஜினிக்கு சினிமாவை தாண்டி அடுத்த கட்டத்தை பெற்றுத் தந்தது.
  • ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா என ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றி பெற்றது.
  • ரஜினி படங்கள் வெளியானாலே தங்களுக்கு திருவிழாதான் என தியேட்டர் உரிமையாளர்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.
  • கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த முத்து படம் இவருக்கு வெளிநாட்டிலும் ரசிகர்களை பெற்றுத் தந்தது.
  • ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதி மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை உலக நாடுகளுக்கு அடையாளம் காண்பித்தது.
  • மாபெரும் எதிர்பார்ப்பில் உருவான பாபா படம் பல அரசியல் பிரச்சினைகளை சந்தித்தது.
    சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படம் ரஜினி கேரியரில் சற்று தோல்வியை சந்தித்தது.
  • ஆனாலும் தன்னை நம்பிய விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த ஒரே நடிகர் ரஜினிதான்.
  • இதன்பின்னர் பி வாசு இயக்கிய “சந்திரமுகி” மாபெரும் வெற்றிப் பெற்றது. ஒரே திரையரங்கில் 800 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.
  • ஷங்கர் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்த “எந்திரன்’ படம் பல சினிமா சரித்திரங்களை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றில் ஓர் புதிய திருப்புமுனையையும் உண்டாக்கியது.
  • சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றாலும் இமயமலையின் உச்சிக்கு அடிக்கடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
  • இன்னமும் அதே எளிமையோடு தன் ஆன்மிக தேடல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
  • டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ரஜினி பற்றி தி நேம் இஸ் ரஜினி என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதே புத்தகம் தமிழில்… ரஜினியின் பேரைக் கேட்டாலே என்ற பெயரில் வெளியாகியது.
  • தனது நீண்ட கால நண்பரான தாணு தயாரிப்பில் முதன்முறையாக கபாலி படத்தில் நடித்தார்.
  • இப்படத்தின் விளம்பரங்கள் விமானம் வரை பறந்தன.
  • தென்னிந்தியாவில் உள்ள பல ஐடி நிறுவனங்கள் இப்படத்தின் ரிலீஸ் நாள் அன்று விடுமுறை அளித்தனர்.
  • கபாலி படத்தை முதல் நாள் காண வேண்டும் என பல படப்பிடிப்புகள் அன்று நிறுத்தப்பட்டன.
  • 2017 டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் வருகையை உறுதிசெய்தார். விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார்.
  • அதன்பின்னர் தன் ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார். விரைவில் அதிரடி அறிவிப்பாக கட்சியை அறிவிப்பார்.
  • நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினி நடித்த இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் (2018) வெளியானது.
  • ஜீன் மாத தொடக்கத்தில் காலா படமும் நவம்பர் 29ஆம் தேதி 2.0 படமும் வெளியானது.
  • 2.0 படம் இந்தியாவிலேயே முதன்முறையாக 3டியில் படமாக்கப்பட்டது. மேலும் கிட்டதட்ட 600  கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 2019 வருடத்தில் மே மாதம் சீனா நாட்டில் 57000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தின் பரபரப்பு அடங்குவற்குள் அதிரடியாக பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் 80-90 களில் பார்த்த ரஜினியை போல இளமையாக இருக்கிறார். இந்த படம் 2019 பொங்கலுக்கு பராக் என அறிவித்துள்ளனர்.
  • இதன்பின்னர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் அறிவிப்பு வரும்.
  • ரஜினியின் ஸ்டைல் போலவே அவரின் பன்ச் வசனங்களும் பிரபலம். பன்ச் டயலாக் என்றாலே அது ரஜினிதான்.
  • இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் அடுத்த தலைமுறை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்து வருகிறபோது, தமிழகத்தில் மட்டுமே கடந்த 44 ஆண்டுகளாக இவர் ஒருவரே சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார்.
  • இப்பட்டத்திற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருந்தாலும் இவர் அசைக்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.
  • சிம்பிளா ரஜினி சார் ஸ்டைல்ல சொன்னா… கண்ணா இது நான் சேர்த்த கூட்டம். அன்பால தான சேர்ந்த கூட்டம். இது அன்பு சாம்ராஜ்யம். இதை யாராலும் அசைக்க முடியாது என்று தன் செயலால் செய்து காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.
  • அடுத்த 2019 ஆண்டில் நிச்சயம் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடின உழைப்பால் திரையுலகை ஆட்சி செய்த ரஜினி, மக்கள் ஆசைப்பட்டால் அவர் முதல்வராக உயர்ந்து மக்கள் பணி செய்ய வாழ்த்துகிறோம்.

Super Star The Super One Rajinikanth Birth day special

இன்று (12.12.2018) அவரது பிறந்த நாளில் நாங்கள் ரசிகர்களுடன் இணைந்து ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.

rajini characters

ஜாம்பி-க்காக யோகி பாபுவுடன் இணையும் யாஷிகா ஆனந்த்

ஜாம்பி-க்காக யோகி பாபுவுடன் இணையும் யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yaashika Anand team up with Yogi Babu for ZOMBIE movieதிரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஜாம்பி. திரில்லராகவும் காமடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்தது.

பிற்காலத்தில் ஜாம்பி காமெடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது.

இந்த ஜாம்பியை வைத்து முதன் முறையாக தமிழில் படத்தை தயாரிக்கிறார்கள். அதற்கு “ஜாம்பி” என்றே பெயரிட்டுள்ளார்கள்.

‘எஸ்3’ பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம், V. முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை புவன் நல்லான். R இயக்குகிறார். இவர் “மோ” என்ற படம் மூலம் ஹாரர்-காமடி படத்தை இயக்கி புகழ் பெற்றவர்.

கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதை தான் நாயகனும். . நாயகியும். . வில்லனும். ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமடியான இப்படத்தில் யோகி பாபு, “பிக்பாஸ்” புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

யூ ட்யூப் ( you tube) “பரிதாபங்கள்” புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் அவார்ட் படமான “லைஃப் ஆஃப் பை “படத்தில் நடித்த T. M. . கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவர் “நண்பன் “, “இன்று நேற்று நாளை”, “தில்லுக்கு துட்டு”, “செக்க செவந்த வானம் ” போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றவர்.

மேலும் மனோபாலா, “கோலமாவு கோகிலா” அன்பு தாசன் , பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவரவர் பாணியில் வெவ்வேறு தளங்களில் காமடிகளில் கலக்கி வரும் இவர்களை இப்படம் மூலம் இணைத்ததில் பெருமை கொள்கிறேன் என்றார் இயக்குனர், புவன் நல்லான்.

வெங்கட் பிரபுவின் “பார்ட்டி “படத்திற்கு பிறகு பிரேம்ஜி இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் கலை அமைக்க, தினேஷ் எடிட்டிங் செய்ய, ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைக்க , இணை தயாரிப்பு : பாலா அன்பு. வருகிற டிசம்பர் 13-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும்.

Yaashika Anand team up with Yogi Babu for ZOMBIE movie

கேரளாவில் என்ஜிகே சூட்டிங்; சூர்யாவின் டூயட்டை படமாக்கும் செல்வராகவன்

கேரளாவில் என்ஜிகே சூட்டிங்; சூர்யாவின் டூயட்டை படமாக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas NGK movie last shoot schedule happening at Keralaசூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடனே அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்த்து.

ஆனால் நாள் ஆக ஆக அதன் மீதான எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது.

காரணம் படத்தின் தகவல்கள் சரியாக வரவில்லை. மேலும் சூட்டிங்கையும் சில மாதங்கள் நிறுத்தி வைத்தனர்.

இதனிடையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூர்யா.

தற்போது மீண்டும் என்ஜிகே சூட்டிங்கை தொடங்கியுள்ளார் செல்வராகவன்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் கொச்சி அருகேயுள்ள மட்டாஞ்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.

சூர்யா மற்றும் ரகுல் பிரீத் சிங் நடிக்கும் ஒரு பாடலை இங்கே படமாக்குகிறார்களாம்.

மற்றொரு நாயகியாக சாய்பல்லவி நடிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Suriyas NGK movie last shoot schedule happening at Kerala

More Articles
Follows