தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா நிறுவனம் சார்பாக இலங்கையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ளவிருந்து, பின்பு அரசியல் நெருக்கடியால் ரத்து செய்தார்.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் மாதவன் பேட்டியளித்த போது, ரஜினி விவகாரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதில்…
“சில சமூக பிரச்சினைகளை நடிகர்களான எங்களுடன் சம்பந்தப்படுத்தப்படுவது நியாயமற்றது.
திரையில் நீங்கள் நடிகர்களின் முகத்தைதான் பார்க்கிறீர்கள்.
ஆனால் அதற்குப் பின்னால் 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.
ஒருவர் பணக்காரராக இருப்பதற்கு அவரை குற்றம் சுமத்துவது நியாயம் அல்ல.
பணக்காரனாக நாங்கள் பிறக்கவில்லை. நேர்மையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.
சட்டவிரோதமாக வரி செலுத்தாமல் வாழவில்லை.
ஒரு நடிகரின் சம்பாத்தியத்தின் பின்னால் பொறாமைப்பட ஒன்றுமில்லை.
எங்களால் தெருவில் இறங்கி நடக்க முடியாது. கூட்டம் கூடிவிடும். அதற்கு ஏற்றது போல் வாழவேண்டியுள்ளது.
ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்து சரியான முடிவு எடுத்துள்ளார்.
மேலும் சர்ச்சையை உருவாக்காமல் அந்த விஷயத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.
அவரது கொடுத்துள்ள அறிக்கையில் கூட ஒரு நடிகனாக, மனிதாபிமான அடிப்படையில் எதிர்காலத்தில் நான் இலங்கை செல்லும்போது அதை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
அது என்னை கவர்ந்தது” என்று தெரிவித்துள்ளார் மாதவன்.