தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’.
சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் பிரேம் ஜி, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்து வந்தனர்.
சிம்புக்கும் படக்குழுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் நிறுத்தப்பட்டது.
இதனால் சிம்பு மீது அவரது
ரசிகர்களே கோபம் அடைந்தனர்.
அதன் பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் படம் தொடங்கவிருந்த்து.
இதனிடையில் கொரோனா ஊரடங்கால் அனைத்து பட சூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.
தற்போது சில தளர்வுகளுடன் சினிமா சூட்டிங் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும் பெரிய பட்ஜெட் பட சூட்டிங்குகள் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் மாநாடு படம் டிராப் ஆகிவிட்டதாக பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இதனை சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் கண்டித்துள்ளார்.
அதில்….
“மாநாடு” படம் ட்ராப் என அடிக்கடி செய்தி போடுவதின் உள் நோக்கம் தான் என்ன விகடனாரே?? @vikatan @CinemaVikatan
என் மீது வன்மமா? அல்லது சிம்பு மீதா? தயவுசெய்து தவறான செய்திகளை ஊதிவிடும் உங்கள் Source ஐ மாற்றுங்கள்.
விரைவில் மாநாடு ஷூட்டிங் போகும் தேதி அறிவிக்கப்படும்.
Maanadu producer reply to Vikatan