தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கம் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கவிஞர் சிநேகன் பேசியதாவது…
“எல்லோரும் பள்ளிக்கூடத்தில் கற்பார்கள், ஆனால் பள்ளிக்கூடமே ராதாரவிதான். அன்பு, அரவணைப்பு அவரிடம் உண்டு. வாய் சொல் அல்லாமல் செயலிலேயே காட்டுவார்.
S.V. சேகருக்கு ஸ்விட்ச் எங்கிருக்கிறது என்று தெரியும். கலை மானுடத்தின் சொந்தம், யாருடைய உரிமையையும் பறிக்கக்கூடாது. எல்லோருக்கும் அடையாளம் ரொம்ப முக்கியம்.
3000 பாடல்கள், 72 விருதுகள், 6 புத்தகங்கள், இவை யாவும் என்னை அடையாளப்படுத்தவில்லை. பிக் பாஸ் தான் அடையாளம் காட்டியது. கலைஞர்கள் விமர்சனங்களை தூக்கியெறிய வேண்டும்.
அப்படி எறிந்ததால் தான் ராதாரவி இன்று ‘ராஜாரவி’யாக இருக்கிறார். இவ்வாறு சினேகன் பேசினார்.
Lyricist Snehan speech at New Nadigar sangam meeting