கொரோனா தொற்று சிகிச்சை..; எப்படி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.?

கொரோனா தொற்று சிகிச்சை..; எப்படி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanthநடிகரும் தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்று லேசான அறிகுறியுடன் இருந்ததால் எவ்வித பிரச்னையும் இல்லையாம்.

தற்போது அவர் நலமாகவும், ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம்.

திட உணவுகளைவிட ஜூஸ், சூப் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் அருந்தி வருகிறாராம்.

தொடர் சிகிச்சை பலன் அளித்துவருவதால் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Latest update on DMDK leader Vijayakanth’s health

முதல்வர் வேட்பாளர் யார்.? அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

முதல்வர் வேட்பாளர் யார்.? அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eps opsஅதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று செப்டம்பர் 28 நடைபெற்றது.

இதில் 2021 சட்டமனற தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா.? எனத் தெரியவில்லை.

அதிமுக கட்சிக்கு ஒற்றைத் தலைமையா? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அவை…

*கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சரை பாராட்டி தீர்மானம்

*கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

*மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தமிழக அரசு தடுத்து நிறுத்தியதாக கூறி அதிமுக செயற்குழுவில் பாராட்டு

*நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.

*காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அறிவித்த தமிழக அரசுக்கு அதிமுக செயற்குழுவில் பாராட்டு

*அதிமுக அரசு தொடர அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று தீர்மானம்

*ரூ.14ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி

*ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி – அதிமுக செயற்குழு

* இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் கொள்கை… மொழி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்காது

* கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு.

*மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம்.

AIADMK passes 15 resolutions in party’s executive committee

புதுச்சேரியில் அக். 5 & 12 தேதிகளில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி.; எந்தெந்த வகுப்புகள் முழு தகவல்கள்…

புதுச்சேரியில் அக். 5 & 12 தேதிகளில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி.; எந்தெந்த வகுப்புகள் முழு தகவல்கள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry governmentபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலர் அன்பரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில்… புதுச்சேரி, காரைக்காலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

மேலும், 9, 11 ம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 12 முதல் பள்ளி செல்லலாம்.

மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியையும், மதிய உணவையும் கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம்.

ஆனால் கொரோனா கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியையும் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும்.

தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து பதிவிட வேண்டும்.

ஏதேனும், அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pudhuchery govt allows schools to reopen

வேளாண் மசோதா.; விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசுகள்… கமல் கண்டனம்

வேளாண் மசோதா.; விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசுகள்… கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanநாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில்..

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே பல திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது அரசு.

தற்போது விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், வேளாண் மசோதா சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

Kamal Haasan, attacks ruling AIADMK

TRP ரேட்டிங்குக்காக குழந்தைகள் அழ கூடாது..; டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க SPB போட்ட கன்டிசன்

TRP ரேட்டிங்குக்காக குழந்தைகள் அழ கூடாது..; டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க SPB போட்ட கன்டிசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBமறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் பற்றிய நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டே போகலாம். அப்படி ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்தவர் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் அவர் டிவி ரியால்ட்டி ஷோக்களில் பங்கேற்றார்.

அது குறித்து டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்…

”குழந்தைகள் பாடல் பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எஸ்பிபி அவரிடம் அனுமதி கேட்க சென்றேன்.

அப்போது அவர் ஒரு கன்டிசன் விதித்தார்.

தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு குழந்தை கூட அழுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.

அப்படி அழுதாலும் அதை காட்டி டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பயன்படுத்தக்கூடாது” என்றார் எஸ்.பி.

அவரின் அந்த பார்வை டிவி நிகழ்ச்சிகள் மீதான என் எண்ணங்களையும் மாற்றியது.

இனி வரும் தலைமுறை உங்களுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருப்பார்கள்”

இவ்வாறு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் பதிவிட்டுள்ளார்.

Interesting facts of late singer SPB

மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு இல்லம் கட்ட எஸ்பிபி குடும்பத்தினர் முடிவு

மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு இல்லம் கட்ட எஸ்பிபி குடும்பத்தினர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB and his sonகடந்த 50 ஆண்டுகளாக இந்திய இசை ரசிகர்களை தன் குரலால் வசப்படுத்தியவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

உடல்நலக்குறைவால் கடந்த செப். 25 வெள்ளிக்கிழமை காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் தமிழக காவல்துறை அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் நடிகர்கள் அர்ஜுன், விஜய், ரகுமான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் SPB உடல் புதைக்கப்பட்ட தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அவருக்கு நினைவு இல்லம் அமைக்கப்படும் என அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

Wish to build a memorial dedicated to all SPB fans – SPB Charan

More Articles
Follows