தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் நடத்தினர்.
இதில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை.
அஜித் இதுவரை காவிரி விவகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. அவர் திறக்க போவதுமில்லை என்பது வேறு கதை.
இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத சிம்பு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது அவர் பேசும்போது…
ஐபிஎல் போட்டியில் கலந்துக் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த காவிரி விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும்.
கிரிக்கெட் போட்டியாளர்கள் கறுப்பு கொடிகள் அணிய வேண்டும் என ரஜினி சார் சொன்னார். வேண்டாம் அவர் பேரை சொன்னால் ஏதாவது பிரச்சினை வரும்.
அப்துல் கலாம்… அவரு இறந்துட்டாரா? அப்படின்னா அவருடைய ஆன்மாதான் ஐபிஎல் போட்டியில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க சொன்னது.
எங்களை மட்டும் நீங்கள் போட்டி மைதானத்திற்குள் விட்டு பாருங்கள். அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்கள். மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.” என்று பேசினார் சிம்பு.
Late Abdul Kalam soul advice me to Ban IPL match at Chennai says Simbu