கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம்.

அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது

அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’. எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்.

அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே தயாரிப்பில் இறங்கியுள்ளது.

அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ‘ரூபம்’ தயாராகவுள்ளது.

இதில் பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில்லர் படங்கள் என்றாலே தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரதானமாக இருக்க வேண்டும். ‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2021ம் ஆண்டில் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்துக் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்.

KJR studios next film is titled Rubam

Rubam

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்..; ரஜினிக்கு முக. அழகிரி வாழ்த்து

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்..; ரஜினிக்கு முக. அழகிரி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Alagiri Rajinikanth2021ல் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்தார்.

மேலும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார்…

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.

தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

ரஜினி ரசிகர்கள் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்….

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, ரஜினிகாந்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்து கொண்டார்.

MK Azhagiri wishes to Rajinikanth on his political entry

MEGA BREAKING தமிழக தலையெழுத்தை மாத்தனும்.. என் வெற்றி மக்களின் வெற்றி.. என் உயிரை விட மக்கள் நலனே முக்கியம்..; கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்.. – ரஜினி

MEGA BREAKING தமிழக தலையெழுத்தை மாத்தனும்.. என் வெற்றி மக்களின் வெற்றி.. என் உயிரை விட மக்கள் நலனே முக்கியம்..; கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அவர் பேசியதாவது…

என் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்

என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்.

அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும்.

Rajinikanth RARE PHOTOS

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது.

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம்… கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Time has come to change the fate of TN says Rajinikanth

Rajinikanth

MEGA BREAKING ரஜினி கட்சி கன்பார்ம்..; மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்.. அதிசயம் அற்புதம் நிகழும் என அதிரடி அறிவிப்பு

MEGA BREAKING ரஜினி கட்சி கன்பார்ம்..; மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்.. அதிசயம் அற்புதம் நிகழும் என அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

“அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளின் உதவி கேட்டு சென்னை வந்த மாற்றுத் திறனாளி பெண்..; நிதியுதவி அளித்த சூப்பர் ஸ்டார்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேசினார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 3ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது ட்விட்டரில்…

* தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் – ரஜினி

Rajinikanth RARE PHOTOS

* மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல – ரஜினிகாந்த்

* அற்புதம்.. அதிசயம்.. நிகழும் – ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/9tqdnIJEml

Super Star Rajinikanth’s official statement on his political entry

என் உயிர் தோழா… விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பாடி நடித்த புரட்சி பாடல்

என் உயிர் தோழா… விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பாடி நடித்த புரட்சி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

En Uyir Thozhaகேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள புரட்சி பாடலின் FIRST LOOK போஸ்டரை இன்று தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனிஇசைப்பாடல் (Independent Music) ஒன்றை பாடி நடித்துள்ளார் விஜய பிரபாகரன்

இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார்.

இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..

தமிழை என்னுயிர் என்பேன் நான்…
தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்றவர்,

இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பாடலின் First Look ஐ கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijayakanth released En Uyir Thoazha first look

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மினிஸ்டர்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மினிஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

முரளி தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்.

அப்போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை புதிய நிர்வாகிகள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு விடும்

‘மாஸ்டர்’ படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் ‘மாஸ்டர்’ படம் வெளிவருவதற்கு முன்பே கொரோனா இல்லாமல் போகும் என அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

TN minister Kadambur Raju talks about Vijay’s Master release

More Articles
Follows