வீட்டில் வேலை செய்த திருடன்.; நடிகை போலீசில் புகார்.; மீடியாவுக்கு எச்சரிக்கை!

வீட்டில் வேலை செய்த திருடன்.; நடிகை போலீசில் புகார்.; மீடியாவுக்கு எச்சரிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன.

இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டிருக்கிறது.

(நம் FILMISTREET தளத்தில் இது போன்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Parvati nair filed police complaint and warns Media

Actress @paro_nair, who has filed a police complaint against a person working in her household for stealing costly gadgets from her home, has said defamation suits will be filed against those media organisations that look to distort the truth and defame her.

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர்.; மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வழங்கிய ஸ்டாலின்

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர்.; மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வழங்கிய ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே இதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. மேலும் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது.

இந்த இருவிழாக்களிலும் பாரத பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து அதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கலுக்கு வருகை தந்தார் பிரதமர்.

அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

அப்போழுது பிரதமரை வரவேற்ற ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசளித்தார்.

இன்றைய விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்தி கிராம பல்கலைகழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.

Stalin gift modi ponniyin selvan books and ilaiyaraaja receives honor doctor from PM

ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் ‘துணிவு’ படத்தை துவம்சம் செய்த ‘வாரிசு’.; முழு தகவல்கள்

ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் ‘துணிவு’ படத்தை துவம்சம் செய்த ‘வாரிசு’.; முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு ஆகிய இரு படங்களும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜயின் படமும் அஜித்தின் படமும் ஒரே நாளில் மோத உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தின் வியாபாரம் & விநியோக உரிமை பற்றிய தகவல் கிடைத்துள்ளன.

அதன் விவரம்…

விஜய்யின் ‘வாரிசு’ பட தமிழக விநியோக உரிமை மட்டும் 65 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

அஜித் நடித்த ‘துணிவு’ படமும் 60 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் 8 கோடிக்கும் துணிவு படம் ஆறு கோடிக்கும விற்பனை.

கேரளாவில் வாரிசு படம் ஆறு கோடிக்கும் துணிவு படம் 5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கன்னடத்தில் துணிவு படம் 5 கோடிக்கும் வாரிசு படம் 4 கோடிக்கும் விற்பனை.

வட இந்தியாவில் பாலிவட்டில் துணிவு படம் 10 கோடிக்கும் வாரிசு படம் 8 கோடிக்கும் விற்பனை ஆகி உள்ளது.

இவை இல்லாமல் வெளிநாடு உரிமை, ஓடிடி & சாட்டிலைட் என அனைத்திலும் ‘துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ படம் முன்னணியில் உள்ளது.

இதுவரையில் ‘வாரிசு’ படம் ரூ 240 கோடிக்கும் அஜித்தின் ‘துணிவு’ ரூ. 170 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

இவையெல்லாம் ரிலீசுக்கு முன்பான வசூல் நிலவரங்கள் மட்டுமே. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு இந்தப் படங்களின் மொத்த வசூல் எவ்வளவு? என்பது தெரிய வரும்.. அதுவரை காத்திருப்போம்..

Varisu beats Thunivu in pre release business

80களின் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைகிறார்?

80களின் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைகிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் விக்ராந்தின் தந்தையாக ரஜினி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் விஷ்ணு விஷாலுக்கு இணையான முக்கிய வேடத்தில் நடிக்கும் அம்மாவின் கதாபாத்திரமும் முக்கியமானது. நம்பகமான ஆதாரங்களின்படி, ஐஸ்வர்யா இந்த பாத்திரத்திற்காக பிரபல 80 களின் நடிகை ஜீவிதா ராஜசேகரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவிதா 1984 ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் ‘உறவை காத்த கிளி’ படத்தில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதிக்கு DSP புரோமோசன் கொடுத்த சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

விஜய்சேதுபதிக்கு DSP புரோமோசன் கொடுத்த சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கடைசி விவசாயி & மாமனிதன்’ படத்திற்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

(சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ & ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம்.)

இவர்களின் புதிய பட கூட்டணிக்கு தற்காலிகமாக விஜேஎஸ் 46 என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது DSP (டிஎஸ்பி) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் நாயகியாக அனுக்ரீத்தி வாஸ் நடித்துள்ளார்.

டி. இமான் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதி மாஸாக ராயல் என்ஃபீல்டில் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi Movie DSP title and first look poster

காதல் கல்யாணம் எப்போ.? ஹாட்ரிக் ஹாஃப்பியில் அசோக் செல்வன்

காதல் கல்யாணம் எப்போ.? ஹாட்ரிக் ஹாஃப்பியில் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது.

ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து சில துளிகள் இங்கே…

நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள் .அதை சொல்லிக்காட்ட விரும்பவில்லை.

ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான். உங்கள் கருத்துக்களின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும் .அதுவே என் விருப்பம்.

ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன்.

இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.

கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம்.

எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது.

அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

More Articles
Follows