சசிகுமார் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன் – உதயநிதி கூட்டணி

சசிகுமார் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன் – உதயநிதி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி.. அரசியல் பிரச்சாரம் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

எனவே தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார்.

ஒரு பக்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பட பணிகளில் பிஸியாக உள்ளார் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதன் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படத்தில் உதயநிதி நடிக்கிறார் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

ஆனால் இயக்குனர் யார்.? இசையமைப்பாளர் யார்.? நாயகி யார்.? என்பதை அறிவிக்கவில்லை

இந்த நிலையில் இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்குவதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே சசிகுமார் நிகிலா வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடித்த ‘கிடாரி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் முருகேசன்

Kidaari director to direct Udhayanidhi Stalin’s next film

ரஜினி சொல்வது அவருக்கும் புரியல.; சீரியஸா எடுத்துக்க வேணாம்.. – வைகோ

ரஜினி சொல்வது அவருக்கும் புரியல.; சீரியஸா எடுத்துக்க வேணாம்.. – வைகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவையில் உள்ள ம.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதன்பின்னர் நடிகர் ரஜினி குறித்து பேசும்போது…

தமிழக கவர்னரை சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவர் சொல்வது அவருக்கும் புரியவில்லை.. யாருக்கும் புரியவில்லை.

ஒரு நாள் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.

அதற்காக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார். உறுப்பினர்களை சேர்த்தார்.

பின்னர் இனி அரசியலுக்கு வர மாட்டேன் என்றார்.

கவர்னரை சந்தித்தார். அரசியல் பேசினேன் என்கிறார். இதனால் ரஜினி பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.”

இவ்வாறு வைகோ கூறினார்.

Vaiko on Rajini meeting with Governor

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் அடுத்த சீசன் புரோமோ வெளியானது

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் அடுத்த சீசன் புரோமோ வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உணவு முறை உடை என அனைத்தும் மாநிலத்திற்கும் வேறுபட்டு காணப்பட்டாலும் எல்லா மாநில மக்களுக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’.

இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த ஐந்து சீசன்களையும் இவர் தான் தொகுத்து வழங்கினார்.

அதுபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

தெலுங்கில் கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தற்போது 6வது சீசனையும் வழங்க உள்ளார்.

அதற்கான பிரமோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஆனால் தமிழில் எப்போது பிக் பாஸ் தொடங்கும் என்பது தெரியவில்லை.

இதற்கான காரணம் என்னவென்றால்.. தற்போது பட தயாரிப்பிலும் நடிக்க உள்ள படங்களிலும் கமல் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்ஜுனா

Actor Nagarjuna unveils Bigg Boss Telugu 6 promo

ராஜு முருகனுடன் ஒரு படம்.. மீண்டும் லோகேஷுடன் ஒரு படம்.; கன்ஃபார்ம் செய்த கார்த்தி

ராஜு முருகனுடன் ஒரு படம்.. மீண்டும் லோகேஷுடன் ஒரு படம்.; கன்ஃபார்ம் செய்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் மலேசியாவில் ப்ரோமோஷன் செய்த பட குழுவினர் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அதன்பின்னர் நேற்று கேரளா சென்று அங்கு பிரமோஷன் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் கார்த்தியிடம் சில கேள்விகளை கேட்டனர்.

கார்த்தி பதிலளிக்கும் போது…

“விரைவில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்.

விஜய் 67 படத்தை முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் வரும்போது ‘கைதி 2’ படம் தொடங்கும் எனவும் தெரிவித்தார் கார்த்தி.

கார்த்தி

Karthi confirmed his project with Lokesh Kanagaraj and Raju Murugan

JUST IN செஸ் ஒலிம்பியாட் நிறைவு : கமல் வாய்ஸ்.. விஜய் பாடல்.. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா.. ஸ்டாலின் மாஸ் என்ட்ரீ

JUST IN செஸ் ஒலிம்பியாட் நிறைவு : கமல் வாய்ஸ்.. விஜய் பாடல்.. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா.. ஸ்டாலின் மாஸ் என்ட்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்தன.

12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இதன் தொடக்க விழாவிற்கு வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று நிறைவு நாளில் கருப்பு பேண்ட் கோட் சூட் அணிந்து வந்திருந்தார்.

அவர் விழா அரங்கில் நுழைந்தபோது
‘ஆளப்போறான் தமிழன்..’ பாடல் பின்னணியில் ஒலித்தது. அப்போது மாஸாக என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தப் பாடல் ஏ ஆர் ரகுமான் இசையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் குரலில் விடுதலை போராட்ட வரலாற்று காட்சி ஒளிப்பரப்பானது.

மேலும் அதனை சார்ந்த சமூக நீதி போராட்ட வரலாற்றை விளக்கும் காட்சிகளும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஒளிப்பரப்பானது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா.

Chess Olympiad closing ceremony CM Stalin mass entry Vijay song Kamal Voice Sivakarthikeyan daughter song

‘தமிழ் ராக்கர்ஸ்’ அப்டேட் : பைரசியை அழிக்க ஏவிஎம் நிறுவனத்தில் அருண் விஜய்

‘தமிழ் ராக்கர்ஸ்’ அப்டேட் : பைரசியை அழிக்க ஏவிஎம் நிறுவனத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர்.

முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும்.

எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் அசலாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளது.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட இந்த தொடர், நேயர்களை ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின் பயனம் மூலமாக விவரிக்கிறது.

இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார். ருத்ரா என்பவன் காலம் கடந்து, அடங்க மறுக்கும் ரசிகர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான ஆற்றல் மிக்க இணைய தள திருடர்கள் மீது போர் தொடுப்பவனாக காட்டப்படுகின்றான்.

ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே கதைத்தளம்.

இத்திரைப்படத்தினை நாட்டில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் பிரபலமாக உள்ள AVM தயாரிப்பு நிறுவனம் தனது OTT உலகின் நுழைவு வாயிலாக இந்த தொடரினை தயாரிக்கிறது.

மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாதின் எழுத்தில் உருவான இந்த தொடர், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பதிவான கருத்துக்கள்

அருணா குகன், தயாரிப்பாளர், AVM நிறுவனம்..

தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிப்பரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலத்தினை மேலும் கூட்டியிள்ளது.

தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.

அறிவழகன், இயக்குனர்-

பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது.

தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறது.

அருண் விஜய், நடிகர் –

இந்த தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும்.

இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை.

எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கின்றேன். திறை துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Arun Vijay starrer Tamil Rockers update

More Articles
Follows