தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டது அதிமுக கூட்டணி.
இத்தொகுதியில் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த நடிகை குஷ்பு, தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே அந்த தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராகவும் குஷ்பு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்பு கூறப்பட்டது.
ஆனால் சேப்பாக்கம் தொகுதியை பா.ம.க.,விற்கு அதிமுகவுக்கு கொடுத்தவிட்டதால் குஷ்பு & பா.ஜ., தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்தது.
இன்று வெளியான திமுக வேட்பாளர் பட்டியலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குஷ்பூவுக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்பதை கலாய்த்து நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டனர்.
இது பற்றி குஷ்பு பேசியதாவது…
“தேர்தலில் போட்டியிட உள்ளதாக நான் கூறவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத்தான் நான் செய்தேன்.
எனக்கு சீட் கொடுப்பார்கள். நான் தேர்தலில் நிற்பேன் என்ற ஒப்புதலோடு பா.ஜ.க.வுக்கு வரவில்லை.
கட்சி மீது இருக்கும் நம்பிக்கை வந்தேன். இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக அசாம், மேற்கு வங்கம் கூட செல்வேன்.” இவ்வாறு குஷ்பூ பேசினார்.
மேலும் குஷ்பூவின் ட்விட்டர் பதிவில்…
“ஹஹாஹாஹாஹ .. என்னைப் பற்றி ஒரு பகுதி பத்திரிகைகள் போட்டியிடவில்லை ஏன்? என கேட்கின்றன.
நான் ஒரு போதும் போட்டியிடவில்லை என்று கூறவில்லை .
கட்சியும் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீங்களே ஒரு கண்ணு காது மூக்கு போட்டு ஒரு பொம்மை உருவாகி, நீங்களே feel பண்ணினா எப்படி boss?? உங்களை பார்த்தா பாவமா இருக்கு. பல்பு வாங்கிட்டாங்க” என்று கிண்டலாக கூறியுள்ளார்.
Khushboo reply to her haters