தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆனந்தி.
இவர் தமிழில் ‘பொறியாளன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானதால் இவர் பெயருடன் கயல் ஒட்டிக் கொண்டது.
இதன் பின்னர் சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, என் ஆளோட செருப்ப காணோம். விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜனவரி 7ஆம் தேதி வாரங்கல்லில் ஆனந்திக்கு திருமணம் நடக்கிறது.
மாப்பிள்ளையின் பெயர் சாக்ரட்டீஸ் என தெரிய வந்துள்ளது.
மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனராம்.
‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக சாக்ரடீஸ் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பெற்றோர்கள் பார்த்த வரன் என கூறப்பட்டாலும் இந்த திடீர் திருமணத்திற்கான காரணம் தெரியவில்லை.
ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள முடித்துள்ள… “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவணகூட்டம்” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணத்திற்கு பிறகு கயல் ஆனந்தி நடிப்பாரா? எனத் தெரியவில்லை.
ஆனந்தியின் இல்லற வாழ்க்கை ஆனந்தமாக அமைய வாழ்த்துவோம்…
Kayal Anandhi getting married today in Andhra