தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்து வருவதை தினம் தினம் பார்க்கிறோம்.
கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் இன்னும் பலர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுற்றி திரிவதை பார்க்கிறோம்.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகளவில் இருந்தாலும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது எனலாம்.
தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் மற்ற அரசியல் கட்சிகள் குறை சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன் கருத்தை பதிவு செய்துள்ளார். அதில்…
அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினரயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு’ என்று பதிவு செய்துள்ளார்.