பரத் போடும் காக்கி சட்டைக்கு கைகொடுத்த தீரன் கார்த்தி

பரத் போடும் காக்கி சட்டைக்கு கைகொடுத்த தீரன் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath in Kalidasபரத் நடிக்கும் புதிய படம் காளிதாஸ்.

ஶ்ரீசெந்தில் இயக்கும் இப்படத்தில் பரத் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நடிகர் கார்த்தி மற்றும் பாண்டிராஜ் இருவரும் வெளியிட்டனர்.

இன்வெஸ்ட்கேசன் திரில்லராக உருவாகியுள்ள “காளிதாஸ்” படம் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்துள்ளது.

தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார்.

இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.

இசை விஷால் சந்திரசேகர், எடிட்டிங்- புவன் ஶ்ரீனிவாசன், ஒளிப்பதிவு- சுரேஷ் பாலா
பாடல்கள்- தாமரை
தயாரிப்பு- தினகரன்.M சிவனேசன்.M.S, LEAPING HORSE

தேவர் ஆட்டம் படத்தில் இணையும் முத்தையா-கௌதம் கார்த்திக்

தேவர் ஆட்டம் படத்தில் இணையும் முத்தையா-கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthikகொடிவீரன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு `தேவர் ஆட்டம்’ என தலைப்பிட்டுள்ளனர்.

இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`முத்துராமலிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஒரு ரியாக்சனும் கொடுக்கலையே… கீ பட விழாவில் விஷால் பேச்சு

சிம்பு ஒரு ரியாக்சனும் கொடுக்கலையே… கீ பட விழாவில் விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and silambarasanசிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடர்ந்து ஜீவா நடிக்கும் கீ படத்தை தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

இப்படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இப்பட இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி, சுஹாசினி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட கீ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது…

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார்.

அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே விஷாலின் ஆதரவாளர் இது பற்றி இங்கு பேசக்கூடாது” என்றார்.

இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால்.. “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் சிம்பு தரப்பில் இருந்து எந்த ஒரு ரியாக்சனும் இல்லை.

எனவே இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்பதே தெரியவில்லை. அதனால் தான் இந்த பிரச்சனையில் இன்னும் காலதாமதம் ஆகிறது” என்றார்.

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டவர் சூர்யா; சன் மியூசிக் தொகுப்பாளினிகள் கிண்டல்

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டவர் சூர்யா; சன் மியூசிக் தொகுப்பாளினிகள் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sun music anchorsசெல்வராகவன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்ற செய்திகள் வந்துள்ளன.

இதில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிப்பார் எனவும் வந்த செய்திகள் பார்த்தோம்.

இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் Franka peseta என்ற நிகழ்ச்சியை நிவேதிதா, சங்கீதா என்ற பெண்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அவர்கள் இது குறித்து பேசும்போது…

சிங்கம் படத்துல அனுஷ்காவுடன் நடிக்கும்போதே சூர்யா ஹீல்ஸ் போட்டு நடித்தார். அமிதாப்புடன் எப்படி நடிப்பார். ஸ்டூல் போட்டுப்பாரா?

உட்கார்ந்துக்கிட்டே நடிக்க வேண்டியதுதான் என சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியுள்ளனர்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் முதல் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் விஷால், இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்களை என்ன சொல்ல…? எவ்வளவு உயரம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு உயருகிறோம் என்பதுதான் முக்கியம் என்ற சூர்யா சொன்ன டயலாக்குதான் தற்போது நினைவுக்கு வருகிறது…

ஆண்டாள்-வைரமுத்து சர்ச்சை வழக்கு; கோர்ட் இடைக்காலத் தடை!

ஆண்டாள்-வைரமுத்து சர்ச்சை வழக்கு; கோர்ட் இடைக்காலத் தடை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthuராஜபாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு, ஆண்டாள் குறித்து பேசினார்.

அப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், ஆண்டளை தேவதாசி என்று குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசினார்.

இதனை அடுத்து இந்து அமைப்புகள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகி, எச்.ராஜா, வைரமுத்துவை அசிங்கமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், வைர முத்துவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூற வில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக் கையை குறிப்பிட்டும், மேற்கோள் காட்டியும் தானே பேசினார்? அப்புறம் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த மனுவுக்கு பிற்பகலில் பதிலளிப்பதாக அரசு வக்கீல் கூறியதால், மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதியாக இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நான் ஒரு தடவ சொன்னா டயலாக் அரசியலுக்கு செட்டாகாது..: ரஜினியை சீண்டும் சீமான்

நான் ஒரு தடவ சொன்னா டயலாக் அரசியலுக்கு செட்டாகாது..: ரஜினியை சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and seemanவேலுபிரபாகரன் இயக்கத்தில் தயாராகும் படம் ‘கடவுள்-2’ இதில் பாரதிராஜா, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட சீமான் பேசியதாவது…

ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவை பா.ஜ.கவை. சேர்ந்த எச். ராஜா வேசி மகன் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு சீமான் தன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது…

வைரமுத்து சொல்லாத வி‌ஷயத்தை சொல்லியதாக கூறி பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் எது வேண்டுமானாலும் எல்லாம் பேசுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் இங்கு கால் ஊன்ற முடியாது.

கொல்லைப்புறமாக வந்து கோட்டையில் ஏற முடியாது.

தாமரை ஒருபோதும் இங்கு மலராது. எங்கள் உடலில் படர் தாமரைதான் படர்கிறது.

நீங்கள் நோட்டோவுக்கு கீழ் இருப்பதால் தான் பேட்டா ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்.

ரஜினி ஆன்மீக அரசியல் பற்றி பேசுகிறார். அப்படியென்றால் கட்சி செயற்குழு, பொதுக்குழு கோயிலில் நடக்குமா? நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி என்று சினிமாவின் பஞ்ச் டயலாக் பேசலாம்.

ஆனால் இங்கு அரசியலில் ஒவ்வொன்றையும் நூறு தடவை சொல்ல வேண்டும். இதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் எந்த பக்கம் நின்றாலும் அதற்கு எதிர் பக்கத்தில்தான் நான் நிற்பேன். தமிழ் மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அவர்களை ஆள்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இவ்வாறு சீமான் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் வேலுபிரபாகரன், பாடல் ஆசிரியர் சினேகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More Articles
Follows